உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

❖ LDMMLDMELD - 8 →

மறைமலையம் லயம் –

என்னுஞ் செய்யுட்பிரமாணத்தானே அவர்மெய்வரலாறு இனிது விளங்குதலுடன், அவர்வடபுலத்து வாதாவி என்னும் நகர்மேற்படையெடுத்துச்சென்று அதனைத் தம்மரசற்கு வயமாக்கினாரென்னுஞ் சரிதநுண்பொருளும் புலப்படுவ தாயிற்று. இனி, வடநாட்டின்கட்டொகுக்கப்படுங் கல்வெட்டுப் பட்டையங்களானே நரசிம்மவருமன் முதலாவான் என்னு மேலேயுரைத்த வாதாவி நகரை யழித்துத் தன்வயப்படுத்தினாரென்பதும், அப்போது அந்நகர்வேந்தனா யிருந்தோன் புலிகேசன் இரண்டாமவனென்பதும் பெறப்படு கின்றன. இந்த நரசிம்மவருமனென்னுமரசன் பல்லவவேந்தர் மரபில் வந்தோனாவன். புலிகேசனென்னுமரசன் மேனாட்டுச்

மரசன்

சாளுக்கியவேந்தர் மரபில்வந்தோனாவன்.

இனி, இப்பல்லவவேந்தர்க்கும் மேனாட்டுச் சாளுக்கிய வேந்தர்க்கும் பலமுறையாலும் போர்நிகழ்ந்தனவென்பதும் அப்பட்டையங்களானே பெறப்படும் உண்மையாம். மேலே மொழிந்தவாதாவிநகர்வெற்றி நரசிம்மவருமனை யொழித் தொழிந்த பல்லவவரையர்மேற் செல்லாமையான், தம்மரசற்குத் தண்டத் தலைவராய்ப் படையெடுத்துமேற்சென்ற சிறுத் தொண்டரை அவ்வாறுடையனான வரசன் நரசிம்மவருமன் முதலாவானேயாமென்பதொருதலை. பெரிய புராணத்தி லிவ்வரசன் பெயர்ச்சொல்லப்பட்டதில்லையாயினும், வாதாவி நகரிற் காணப்படும் பல்லவவரையன் கல்வெட்டுப்பட்டைய மொன்று அவ்வெற்றிக்குரியோன் அவ்வரசனென்றுரைக்கும் உறுதிமொழிபற்றிச் சிறுத்தொண்டர்தம் மரசன் நரசிம்ம வருமன் முதலாவானேயாமென்பது உய்த்துணர வல்லார்க்கு நன்குபுலனாம். இனி, மேலேகாட்டிய புலிகேசன் இரண்டா மவனான மேனாட்டுச் சாளுக்கியவேந்தன் செங்கோ லோச்சிய காலவளவை வடநாட்டுச் சிலா சாதனங்கள் கொண்டு டாக்டர் ஹூல்ஸ் என்னுஞ் சிலாசாதன பரிசோத கராற் கி-பி 609 முதல் 642 இறுதியாகவென நன்று குறித்திடப் பட்டது. இங்ஙனம் கி- பி ஏழாம் நூற்றாண்டின் றொடக்க முதலதனீடை யளவுஞ் செங்கோலோச்சிய புலிகேசவாசனைப் புறங்கண்ட நரசிம்ம வருமன் முதலாவோனும் அந்நூற்றாண்டின் றொடக்க முதலிடையளவு மிகுந்திருக்கற்பாலனாம். இனி, அந்த நரசிம்ம வருமனென்னும்வேந்தற் குறுதுணைத் தண்டத் தலைவரான

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/249&oldid=1574670" இலிருந்து மீள்விக்கப்பட்டது