ஞானசாகரம்
225
சிறுத்தொண்டரும் அந்நூற்றாண்டின் முற்பகுதியி லிருந் தாராகற்பாலார். இதுகிடக்க.
6
இனி, ஞானசம்பந்தப்பிள்ளையார் திருச்செங்காட்டங் குடிக்கு எழுந்தருளியகாலையில் ஆண்டிருந்த சிறுத்தொண்ட ராற்றாம் பெரிதும் மெய்யன்போடுபசரிக்கப்பட்டு அவரோடள வளாவினாரென்பது
66
'அந்நாளிற் சண்பைநக ராண்டகையா ரெழுந்தருவ
முன்னாக வெதிர்கொண்டு கொடுபுகுந்து முன்னூல்சேர் பொன்மார்பிற் சிறுத்தொண்டர் புகலிகா வலனார்த நன்னாமச் சேவடிகள் போற்றிசைத்து நலஞ்சிறந்தார்” என்பதனானும்,
66
"சண்பையர்தம் பெருமானுந் தாங்கரிய பெருங்காதற் பண்புடைய சிறுத்தொண்ட ருடன்பயின்று மற்றவனர மண்பாவுந் திருப்பதிகத் தினில்வைத்துச் சிறப்பித்து நண்பருளி யெழுந்தருளத் தாமினிது நயப்புற்றார்
என்பதனானும் நன்குபெறப்படுகின்ற. இஃதல்லாமலும்,
ஞானசம்பந்தப்பிள்ளையார்
நாயனாரைச் சிறப்பித்துச்
தாமே
சிறுத்தொண்ட
“செடிநுகருஞ் சமணர்களுஞ் சீவரத்த சாக்கியரும்
படிநுகரா துயருழப்பார்க் கருளாத பண்பினான்
பொடிநுகருஞ் சிறுத்தொண்டர்க் கருள்செய்யும் பொருட்டாகக் கடிநகராய் வீற்றிருந்தான் கணபதீச் சாத்தானே’
எனவும்,
“செந்தண்பூம் புனல்பரந்த செங்காட்டங் குடிமேய வெந்தநீ றணிமார்பன் சிறுத்தொண்ட னவன்வேண்ட வந்தண்பூங் கலிக்காழி யடிகளையே யடிபரவுஞ் சந்தங்கொள் சம்பந்தன் றமிழுரைப்போர் தக்கோரே
எனவுந் திருப்பதிகங்கட்டளையிட் ளையிட் டருளியவாற்றானும்
அவர்கட்பின்கிழமைத்திறந் தெற்றெனவுணரப்படும். இதனா