உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

மறைமலையம் -8

னே, அச்சிறுத்தொண்டரோடொருகாலத்தினரான ஞான சம்பந்தப்பிள்ளையார் காலமும் நரசிம்மவருமனென்னும் பல்லவவேந்தன் காலமும் ஒன்றேயாதல்பெற்றாம். பெறவே, ஞானசம்பந்தப்பிள்ளையார் கி-பி ஏழாம் நூற்றாண்டின் முற்பாதியிலே யிருந்தருளினாரென மலைவின்றி நிறுத்தப் பட்டவாறுகாண்க.

இன்னும், திரிசிரபுரமலைமுழைஞ்சிற் காணப்படுங் கல்வெட்டுக்களானே நரசிம்மவருமன் முதலாவானுக்குத் மகேந்திரவருமன்

தந்தையான குணபாரனென்னும் முதலாவான் காலத்திலே திருநாவுக்கரையரென்னும் அப்பர் சுவாமிகளிருந்தா ரென்பது டாக்டர் ஹூல்ஸ் என்னுந் துரைமகனார் நிறு வியவாற்றால் இனிதுவிளங்குதலின் அவ்வப்பர்சுவாமிகள் கி-பி. ஆறாம் நூற்றாண்டின் பிற்பாதியினும் ஏழாம் நூற்றாண்டின் முற்பாதியினும் இருந்தா ரென்பது தேற்றமாம். இதனானே, அப்பர்சுவாமிகள் 80- வயதளவு மிருந்தாரெனக் கூறுந் தமிழ்நூல் வரலாற்றுண்மை பெரிதும் வலியுடைத்தாமாறுகாண்க. இனி, எடுத்துக்கொண்ட மாணிக்கவாசகர் காலநிருணயஞ்செய்தற் பொருட்டு மேலே காட்டிய அப்பர் ஞானசம்பந்தப்பெருமான் முதலியோர் காலம் கி-பி ஆறாம் நூற்றாண்டின் பிற்பாதிமுதல் ஏழாம் நூற் றாண்டின் முற்பாதி யீறாகவாமென்பது பெறப்படுதலின், அதுகொண்டு மாணிக்கவாசகர் காலம் கி-பி ஆறாம் நூற்றாண்டின் முற்செல்லுமாறு காட்டுவாம். சுவாமிகள் அருளிச் செய்த “பாடிளம்பூதத்தினானும்” என்னுந் திருவாரூர்ப் பதிகத்தில்,

66

'நரியைக் குதிரை செய்வானு நரகரைத் தேவுசெய்வானும்

விரதங் கொண்டாட வல்லானும் விச்சின்றி நாறுசெய்வானும்”

அப்பர்

என்னுஞ் செய்யுளில் மாணிக்கவாசகர்பொருட்டு இறைவன் நரியைக் குதிரையாக்கிய திருவிளையாடல் நன்கெடுத்துக் குறித்திடப்பட்டது. தம்பொருட்டே பெருமான் நரிகளை யெல்லாங் குதிரைகளாகத் திரித்துக்கொண்டு போதருவானா யினானென மாணிக்கவாசகசுவாமிகள்,

“நரியைக் குதிரைப் பரியாக்கி ஞால மெல்லாம் நிகழ்வித்து”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/251&oldid=1574672" இலிருந்து மீள்விக்கப்பட்டது