உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

309

21. ஆனந்தக் குற்றம் - 2

சோமசுந்தரக்காஞ்சியாக்கம் என்னும் எதிர்மறுப்பின் கண் ஆனந்தக்குற்றம் பற்றி யாம் பரிகரித்துரைத்த உரைக்கூறு தமக்கு உடம்பாடில்லாமை காட்டி நம் ஆப்த நண்பர் சண்முகம் பிள்ளையவர்க ளெழுதிய வழக்குரை எமக்கு உளந்துளும்பு வகை தராநின்றது. அவ்வுரைமுகத்திலே நண்பர வர்கள், புழுத்தலை நாயிற் கடைப்பட்ட புல்லறிவோமையும் நாமியற்றிய நூல்களையும் பெரிதெடுத்துப் புகழ்ந்திட்டார்கள். அப் புகழ்ச்சியுரை தன்கண்நலப்பாடுடைய தாயினும் அதற் கிலக்கா யமைத்துரைக்கப்பட்ட பொருள்க ளதற்கொருசிறிதுந் தகுதிப்பாடுடையனவாகா. அவ்வாறாகவும் அவை நலக்க வுரைநிகழ்த்திய நண்பரவர்கள் நற்குணமாட்சியினையும் ஒருமைப்பாட்டினையும் மிகவியந்து அவர்கண்மாட்டு எழு

பிறப்புந் திரியாவுழுவலுரிமையன்பு பாராட்டுங் கடப்பாடுடை யோம். இன்னும் நட்பின் கெழுதகைமைபற்றி ஒருவர் மாட்டுச் செறிந்த மறுவைச் சுத்திகரித்தற்கஞ்சி நடுநிலை பிறழ்ந்து அந்நட்பிற் கிழுக்கந் தேடுவார் போலாது, எம்முரையிற் றாங்குற்றமெனக்கண்ட பொருளை யெடுத்து மறுத்து எங்கேளுரிமைக்குச் சிறப்புத்தேடிய நன்முறை பொறாமை காண்டு மயங்குந் தமிழ்ப் புலவோர்சிலர்க்கு நல்லறி வுறுப்பாம். இவ்வாறே நல்லறிவு நற்குண மாட்சியுடைய நம் ஆப்தர்களான ஸ்ரீமத் சவரிராயபிள்ளை யவர்களும், ஸ்ரீமத் - இராகவையங் காரவர்களும் கேண்மைத் திறமறிந் துண்மை யான் ஒழுகுகின் றார்கள். இருந்த வாற்றால் நற்றமிழ்ப்பண்டிதர் தமக்குளிங்ஙனம் ஒருமித் துறுவதாராய்ந்து கெழுதகைமை வழுக்காது கேண்மை போற்றி யொழுகுதல் தென்றமிழ் நாட்டிற் கினியுண்டாம் நன்மையினை விளங்கக் காட்டு கின்றது. இது நிற்க.

-

முழுமுத

இனி, ஆனந்தக் குற்றமென வொன்று லறிவினராய் விளங்கிய ஆசிரியர், தொல்காப்பியரானும், அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/334&oldid=1574760" இலிருந்து மீள்விக்கப்பட்டது