உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

339

24. முனிமொழிப்பிரகாசிகை

"தேவர் குறளுந் திருநான் மறைமுடிவும்

மூவர் தமிழும் முனிமொழியுங் - கோவை திருவா சகமுந் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர்”

'வியாசசூத்திரம்'

எனும் ஔவையார் திருவாக்கிற்போந்த 'முனிமொழி' என்பதற்கு என்று பொருளுரைத்த ஆன்றோரைப் பொருளொடு பிணங்கி, அப்பொருள் வழக்கின்கண்ணாகல், செய்யுட் கண்ணாதல், நிகண்டு முதலிய ல்களின்கண்ணாகல் பெறப்படாமையாற் செம்பொரு ளென்றலும், முன்னும் பின்னுமுள்ள சொற்கடம்முளிணங்கிப் பொருள் பயவாவழி யொருசொற் றன்பொருளிற்றீர்ந்து பிறிதுபொருள்பயக்கும் இலக்கணைப்பொரு ளென்றலும், வியாசர் மாயாவாதப் பொருள்விளங்கச் சூத்திரஞ்செய்த கருத்தறிந்து ஸ்ரீசங்கராசாரியர் பாடியஞ்செய்தாராகலிற், சித்தாந்த சைவப்பொருள்போதிக்கு நெறிக்கிடையே வழீ இச்செல்லும் அம்மாயாவாத சூத்திரத்தை ஏனைச் சித்தாந்த சைவ நூல்களோ டொப்ப வைத்துரைத்தல் ஔவையார்க்குக் கருத்தன்றாகலின் குறிப்புப்பொருளென்றலும் செல்லாமை யான், அதனை ‘வாதவூர் முனிவர்' என்று பிரசித்தியுற்று விளங்கும் ‘ஸ்ரீமந் மாணிக்கவாசகசுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய' வெனப் பெயரெச்சத்தொடராகவைத்துப் பொருளுரைத்துக் 'கோவை திருவாசகமும்' என்பதனோடு கூட்டிக் கோடல் வேண்டுமெனப் புதுவதாக வொருபொருள் கூறுவார். அச்செய்யுட்பொருளை நுணுகியாராயு மதுகையின்றி அங்ஙனங் கூறினாரென்பதும், அதற்குத் தொல்லா சிரியர் கூறுமுரையே நடுக்கின்றி நிலையுறுவதா மென்பதும் போதரச் சிறிதுகாட்டுதும்.

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/364&oldid=1574790" இலிருந்து மீள்விக்கப்பட்டது