உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340

மறைமலையம் 8 – 8

பிரமசூத்திரம், வேதாந்தசூத்திரம், வியாசசூத்திரம் என்பன ஒரு பொருட்கிளவிகளாம். அது முதலில் “அதாதோ ப்ரஹ் மஜிஜ்ஞாஸா” என்று தொடங்கிப் பிரமப்பொருளை அறிதல்வேண்டுமென உபக்கிரமோபதேசஞ்

செய்து

பிரமத்தைக் கூறுவதனால் 'பிரமசூத்திர' மெனவும், கணாத சூத்திரம், கௌதமசூத்திரம், காபிலசூத்திர முதலியவற்றைப் போல் வைசேடிகம், நியாயம், சாங்கிய முதலிய வேறு விடயங்களை யுணர்த்தாது, வேதாந்த மெனப்பட்டு உபநிடதங் களிற் பொருள்பெறக் கிளந்தோதப் படும் ஞானத்தையே விரித்து விளக்குஞ்சிறப்பால் “வேதாந்த சூத்திர” மெனவும், ஆக்கியோன் வழங்கப்படும்.

பெயரால் வியாச சூத்திர'மெனவும்

இஃது யாது பயன்கருதி யியற்றப்பட்ட தோவெனின், வேதத்தின் பூர்வபாகத்திற் கூறப்படும் கர்மத்தையே பிரமப்பொருளாக நிறுவித் தம்மாணாக்கராகிய ஜைமினியா லியற்றப்பட்ட சூத்திரப்பொருளை மறுத்து, அவ்வேதத்தின் உத்தரபாகமாகிய உபநிடதங்களிற் கூறப்படும் ஞானத்தை விளக்குதற்பொருட் டியற்றப்பட்டதாமென்பது. இங்ஙனம் கர்மத்தையே பிரமமாகக் கூறி யெழுந்த ஜைமினி சூத்திரத்தையும், ஞானத்தையே பிரமமாகக் கூறி எழுந்த வேதாந்த சூத்திரத்தையும் உற்றுநோக்குவார்க்கு, ஞாக்கிரியா சொரூபராகிய சிவபரஞ் சுடரின் திவ்ய சக்திகளான கிரியையை விளக்கவொன்றும், ஞானத்தை விளக்க மற்றொன்றும் எழுந்த வுண்மை நன்கு விளங்கும். இதனாற் சிவபெருமானது கிரியைத் திறத்தை விளக்கும் ஜைமினி சூத்திரமும், ஞானத்திறத்தை விளக்கும் வேதாந்தசூத்திரமும் இன்றியமை யாதனவா மென்பதூஉம், இவற்றுள்ளும் ஞானத்திறத்தை விளக்கும் வேதாந்த சூத்திரம் ஏனையதினும் மிகச் சிறந்ததா மென்பதூஉம் பறப்படும். ஏனைச் சூத்திரங்களாற் கூறப்ப கூறப்படாததும், அச்சூத்திரப் பொருள்களினுந் தலைமையுற்று மக்களுக்குறுதி பயக்குஞ் சிறப்புடையதுமான ஞானத்தை விரித்துரைக்கும் வியாச சூத்திரமே 'வேதாந்த சூத்திரம்' எனப்படுவதன்றி ஏனைய அப் பெயர்க்குரியவாதல் செல்லாமை யுணர்ந்து கொள்க. உபநிடதப்பொருளையே முதலாகக்கொண் டெழுந்து உண்மை ஞானத்தை யுள்ளவாறே யினிதுவிளக்கும் 'வேதாந்த சூத்திர’த்தை எடுத்தோதுதல் ஒளவையார்க்குக் குறிப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/365&oldid=1574791" இலிருந்து மீள்விக்கப்பட்டது