உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342

மறைமலையம் -8

றுரைத்தல்வேண்டும். அதனையும் அவ் வாறுரைப்பவே, ஒளவையார் பாகுபாட்டுணர்ச்சியின்றி, மாயாவாதநூல்களைச் சைவசித்தாந்த நூல்களோ டொப்பவைத் தோதினாரென்னுங் குற்றமுண்டாம். அல்லதூஉம், மாயாவாத நூல்களோ டொப்பவைத்தோதப்பட்ட தேவாரதிருவாசக முதலிய திருவாக்குகளும் மாயாவாதநூல்களே யாமென்று பெறப் பட்டுச் சைவ சித்தாந்தப் பொருளெல்லாம் திலதர்ப்பணம் பண்ணப்பட்டுப்போமன்றே? இத்துணைக்கு மிடஞ்செய்யும் அப்பொருள் ஈண்டைக்கு ஒரு சிறிதும் இயையுமாறில்லை. அற்றன்று, வேதாந்த சூத்திரம் மாயாவாதப் பொருளே நுதலுவதென்பதற்குச் சங்கராசாரியர் அதன் கருத்தறிந்து கூறிய விழுமியவுரையே சான்றாமாலெனின்;-அவர்க்குமுன் அதற்கங் ஙனமே சிறந்தவோருரை விரித்த நீலகண்ட சிவாசாரியார் உரைப்பொருள்பற்றி வேதாந்த சூத்திரப் பொருட்டுணிவுகோடு மென்பார்க்கு இறுக்க லாகாமையின் அது பொருந்தாது. அல்லதூஉம், நூலாசிரியர் கருத்தறி வதற்குச் சங்கரர் பாடிய பொருளைக் கருவியாகக் கோடல் பிரகாணசமம் என்னும் ஏதுப்போலியாம். அல்லதூஉம், நீலகண்ட சிவாசாரியர் முதலான தொல்லாசிரியரா னுரை யெழுதப்படாத தசோப நிடதங்களுக்குச் சங்கரர் உரை யெழுதியிருப்பதனால், மற்றவ்வுரைப்பொருளையே கருவி யாகக்கொண்டு ஆண்டும் மாயாவாதக்கருத்தையே யேற்றி, அவற்றையும் ஒழித்தல் வேண்டும். ஆதலால், நூலாசிரியர் கருத்தைத் துணிதற் பொருட்டுச் சங்கரர் பாடிய பொருளையே கருவியாகக்கோடல் பல வழூஉக்களுஞ் செறிந்து மேன்மேற் கிளைத்தற்கேதுவா மென்றொழிக. இனி,

சங்கரர்வேதாந்த சூத்திரக் கருத்தறிந்து உரையெழுதினாரென்றலும் பொருந்தாது; என்னை? ஸ்ரீ நீலகண்டர்,பண்டிதாராத்தியர், இராமாநுஜர், ஆனந்ததீர்த்தர் ராமாநுஜர்,ஆனந்ததீர்த்தர் முதலிய ஆசிரியரெல்லாரும் சூத்திரப்பொருளுரைக்கும்வழி யொருவகையாவிணங்கிச் சொல்லும்பொருளும் ஒரு நெறிப்பட்டுச் செல்லவுரைத்து, அஃதியாண்டும் சீவபரபேதங் களை விரித்துவிளக்குவதென்றே வலியுறுத்துக் கூறுவாராக. அவரொடுமுரணிச் சூத்திரப் ருளைக் கிடந்தவாறெடுத்துத் தம்மதத் தோடிணக்கி யுரைக்கமாட்டாமையான், அச்சூத்திரங்களிற் சிலவற்றை

ச்சங்கரர்தாமாத்திரம்

பாரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/367&oldid=1574793" இலிருந்து மீள்விக்கப்பட்டது