22
– 8
மறைமலையம் 8
அன்றுமாலையில் அரசன் ஊரார் கரைகோலிய தனைக்காண வந்து எல்லார்க்கும் அளந்து விட்ட நிலந்திருத்தப்பட்டிருத் தலையும் பிட்டுவாணிச்சிபங்கு அங்ஙனந்திருத்தப் படாதிருத் தலையுங்கண்டு வெகுண்டு அதனைத்திருத்த வந்த கூலியாளாகிய ஒட்டனைத் தன்கை யிலிருந்த பிரம்பாலடித்தலும், அவ்வடி அடித்தவனாகிய பாண்டியனையுள்ளிட்டுச் சரஅசர பேதங் களாகிய எல்லாவற்றின் மேலும் உறைப்ப ஒரு கூடை மண்ணால் அக் கரையைத்திருத்தி ஒட்டவேடங்கொண்டு வந்த இறையனார் மறைந்து சென்ற கருணைத்திறத்தை நினைந்து நினைந்துருகி அவ்வரசன் பக்கத்தில் அமைச்ச ராயிருந்து நேரிற்கண்ட ஸ்ரீ மணிவாசகப்பெருமான் கீர்த்தித் திருவகவலில்,
66
“ஆங்கதுதன்னிலடியவட்காகப் பாங்காய்மண்சுமந்தருளியபரிசும் "
எனவும், திருவம்மானையில்,
“மண்சுமந்துகூலிகொண்டக் °கோவான் மொத்துண்டு புண்சுமந்தபொன்மேனிபாடுதுங்காணம் மானாய்"
எனவும், திருப்பூவல்லியில்,
66
"திண்போர்விடையான்சிவபுரத்தார்போரேறு
மண்பான்மதுரையிற்பிட்டமுதுசெய்தருளித் தண்டாலேபாண்டியன்றன்னைப்பணிகொண்ட புண்பாடல்பாடிநாம்பூவல்லிகொய்யாமோ
எனவும், திருக்கழுக்குன்றப்பதிகத்தில்,
“பிட்டுநேர்படமண்சுமந்த பெருந்துறைப்பெரும் பித்தனே சட்ட நேர்படவந்திலாதசழக்கனேனுனைச்சார்ந் திலேன்'
எனவுந் தாமே தமது திருவாக்காலவ்வனுக்கிரக முறை யினையும், ஈசுரன் தம்பொருட்டுத் தாங்கிவந்த சகளமங்கள வருட்கோல மரபினையும், அவ்வருட்கோலங் கொண்டு வெளிப்பட்ட பெருமான் நிகழ்த்திய திருவிளை யாடன் மாட்சியினையும் விதந்து பலமுறை யெடுத்தோதி யருளிய வாறு காண்க. ஐம்புலங்களுக்கும் ஆர நுகர்ச்சியாம்படி திருகோலந் தரித்துக் காணவுங் கருதவும் உரைப்பவும் வாராத தன் பெருமைக்குணங்களைத் அன்பர்க்கு அனுக்
தன்