உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

மறைமலையம் -8 8

பொருளன்று. மற்று மற்று அது குணப்பொருளாகிய அம் மூன்றனையுங் கடந்து மேல்விரிந்து செல்லும் நான்காவ தாகிய துரியப்பொருளாவதாம். இக்கருத்துப்பற்றியே அதர்வ சிகோப நிடதத்தில் இவையனைத்தும் பிறக்கின்றன; இப்பிரமன் விண்டு உருத்திரன் இந்திரனென்னுமவ ரெல்லாம் பிறக்கின்றனர்; பூதங்களோடு இந்திரியங் களெல்லாம் பிறக்கின்றன; காரணங்களைத் தோற்றுவிப் பானுந்தி யாதா வுமான காரணன்றான் பிறப்பானல்லான்; காரணப் பொருளும். ஐசுவரிய மனத்தையுமுடையானும் அனைத் திற்கும் ஈசுரனு மான சம்பு ஆகாயநடுவிற் றியானிக்கப்படும் என்றும், பஞ்சப் பிரமோபநிடதத்தில் “மூன்றவத்தைகளைக் கடந்ததும் துரியப் பொருளும் சத்தியமும் ஞானமயமாக வுள்ளதும் பிரமன் விண்டு முதலியோராற்சேவிக்கப்படுவதும் எப்பொருளும் பிறத்தற்கு நிலைக்களமாவதும் மேலானதும் ஈசபதவாச்சியப் பொருள்” என்றும் சுருதிவாக்கியங்கள் ஒருங்கெழுந்து அறுதி யிட்டன. இவ்வாறே "தேவர்கோவறி யாத தேவதேவன் செழும் பொழில்கள் பயந்து காத்தழிக்கு மற்றை, மூவர்கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி மூதாதை மாதாளும் பாகத்தெந்தை’ என்று திருவாசகச்சுருதியினும் போந்தவாறு காண்க. இனிச் சுவேதாசுவதரவுபநிடதத்திற் போந்த “எவன் தானொரு வனாயிருந்துகொண்டே எல்லாப் பொருள்களையு மயக்கு வானோஅவன் தன் சருவவல்லமை யால் எல்லா வற்றையும் எல்லாவுலகங்க ளையும் ஆளுகின் றான்; எவன் உற்பத்தியாங் காலத்தும் சம்பவிக்குங்காலத்துந் தான் ஒருவனாகவே இருக்கின் றானோ அவனை அவ் வாற்றான் அறிபவர் மரணத்தைக்கடக் கின்றார்கள். ஏனெனில், இவ்வுலகங் களையெல்லாந் தன் முழுமுதன்மையால் ஆட்சி செய்கின்ற உருத்திரக்கடவுள் ஒருவனேயாதலால், அவனுக்கு வேறாகப் பிறிதொருபொருள் உண்டென்று அறிவுடையோர் சொல்லார்கள்; அவன் சிருட்டி செய்வானொருவனை உண்டாக்கி எல்லாவுலகங்களையும் படைப்பித்துத் தான் அவ்வெல்லா ஆன்மாக்களினும் அந்தரான் மாவாய் வேறுவே றமர்ந்திருக்கின்றான்; அவன் சங்காரகாலத்தில் தன் கோபாக்கினியால் எல்லாவற்றையும் விழுங்குகின்றான். எல்லாப் பக்கங்களில்விழிகளும், எல்லாத் திசைகளின் முகங்களும், எல்லாத் திக்குகளிற்புயங்களும், எல்லா விடங்களிற் பாதங்களும் உடையனாய் ஆகாயத்தையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/67&oldid=1574483" இலிருந்து மீள்விக்கப்பட்டது