உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட

ஞானசாகரம்

43

விபூதி

பூமியையும் உண்டுபண்ணித் தன்கரங்களானும் சிறகுகளானும் அவற்றை ஒழுங்குபடுத்துகிற அவன் ஒருவனே கடவுள்; இங்ஙனம் எல்லாவற்றிற்கும் முதல்வனும் மகருஷியும் சிருட்டி காரணனும் தேவர்களை எல்லாம் பிறப்பிக்கின்றவனும், அவருள்ளும் இரணியகருப்பனை முதலிற் படைத்திட்டவனு மாகிய உருத்திர மூர்த்தி எமக்கு மெய்ஞ்ஞானத்தை உதிப்பிக்கக் வன்' என்னும் அருள்வாக்கியந் திரிமூர்த்திகளுட்பட்ட குணருத்திரர் மேற் செல்வதின்றித் தத்துவங்களை ஒடுக்கிக்கொண்டு அத்தத்துவங்களுக்கும் அதீதமாய் விளங்குந் துரியமுழுமுதற் கடவுளான மாசங்காரஉருத்திரக்கடவுளை வழுத்துதற் பொருட்டு ஆண்டெழுந்ததொன்றாகலின் அதுபற்றி ஈண்டு வரக்கடவதோர் இழுக்கில்லையென்றொழிக. இனி அங்ஙனங்காட்டிய முத்திற முறையுள்ளும் சிலவழிபாடு ஏனையிரண்டினுஞ் சிறந்ததொன்றாதலானும், அச்சிவவழிபாடு பற்றியே அதற்கங்கங்களான யுருத்திராக்க தாரணம் பஞ்சாக்கரமந்திரம் வேதோபநிடத் நூலாராய்ச்சியும் பிறவும் வேண்டப்படுதலல்லது அவ்வழி பாடில்வழி அவை பயப்பாடின்றி வறிது கழிதலானும் அச்சிவ வழிபாடு ஒன்று தானே ஏனையிரண்டினுஞ் சிறந்தெடுத்துப் போற்றப்படுந்தலைமையுடைத்தாம். என்னை? கொழுநனை புடையளான ஒரு தலைமகள் தான் தனக்கினிய அக்காதலனை யுடையளாம் அவ்வியைபுபற்றியே அவடனக்கு இன்றியமை யாச் சிறப்பினவாகிய மங்கலநாண் மஞ்சட்பூச்சுக் கலவைச் சாந்து நறுமுறிக்கொழுந்து விரைமலர்த்தொடையல் செழும் பட்டாடை முதலியன வேண்டப்படுவதன்றி, அவனில்வழி அவை யொருசிறிதும் அவளால் விரும்பப்படா வாகலி னன்பது. இன்னும், இராச்சியவுரிமை பெற்றானோர் ஆண் மகன் தான் அங்ஙனமெய்திய அவ்வுரிமை பற்றியே அதற்கடை யாளங்களான அரதனமுடியும் வெண்கொற்றக் குடையும் அரசமுத்திரையும் அரியணை வீற்றிருப்பும், ஒருங்கு பெற்று ஆட்சிசெலுத்துதலன்றி, அவ்வுரிமையில்லா தானொருவன் ங்ஙனம் அடை யாளங்கொள்ளானாக லானுமென்பது. னிக்கொழுநனையிலளாகிய ஒரு பெண்மகள் மங்கல நாண் முதலிய அலங்காரமுடையளாம் வழி அவளைத்

இராச்சியவுரிமை யில்லாதானொருவன் அஃதுடை யானே அரதன முடிமுதலிய அடையாளங்கொள்வுழி

போல, அரதன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/68&oldid=1574484" இலிருந்து மீள்விக்கப்பட்டது