உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

மறைமலையம் - 9

அஃதவ்விசையா லின்புற்று உறங்கல் கண்டாமன்றே? கொடிய விலங்கினங்களும் நச்சுயிர்களும் புல்லாங் குழலோசை கேட்டவளவானே தந்தொழில் மறந்து இன்புற்றுத் தன்வயமழிதல் தெளியப்பட்ட தொன்றன்றோ? இதன்மாட்சி இனிது அறிவுறுத் தற்கன்றே மாணிக்கவாசகப் பெருமான் திருச்சிற்றம்பலக் கோவையாரில்,

“சிறைவான் புனற்றில்லைச் சிற்றம் பலத்துமென் சிந்தையுள்ளும் உறைவா னுயர்மதிற் கூடலி

னாய்ந்தவொண் டீந்தமிழின்

றுறைவாய் நுழைந்தனை யோவன்றி யேழிசைச் சூழல்புக்கோ இறைவா தடவரைத் தோட்கென்கொ லாம்புகுந் தெய்தியதே.”

என்று திருவாய்மலர்ந் தருளினார்.

இப் பெற்றித்தான இசை, தானேயும் இன்புறுத்துகின்ற பாட்டோடுஞ் சேருமாயின் அவையிரண்டின் கலப்பாற் றோன்றும் இன்பம் இவ்வியல்பிற்றென்று குறித்துரைக்கல் ஏலுமோ? எனவே இசையோடு பிணைந்தியங்கும் பாட்டிற்கும் அஃதின்றி யியங்கும் உரைக்கும் உள்ள வேறுபாடும், இவ்விரண்டில் முன்னையது பயன் பெரிதுடைத்தாதலும் பின்னையது பயன் சிறிதே யுடைத்தாதலும் தெற்றென விளங்காநிற்கும். அற்றன்று, உரைநூல்களும் ஒரோவழி வியப்புணர்வு தரக்காண்டுமாகலின் அதனைச் செய்யுளுக்கே வரைந்து கூறியது பொருந்தாதாம் பிறவெனின்; நன்று கடாயினாய், ஒரோவோருரை நூல்களின் உடை யிடையே பாட்டிற்குரிய சொல்நயம் பொருள் நயங்கள் காணப்படுதலால் அங்ஙனம் அவ்வியப்புணர்வு தோன்றிற் றாகலின் அதுபற்றி ஈண்டைக்காவதோர் இழுக்கில்லை யென்பது, இப் பெற்றிப்பட்ட உரைப்பகுதிகள் சில ஆசிரியர் நக்கீரனார் களவியலுரையினிடையிடையே காணப்படும்; அவை கொண்டு இவ்வுண்மை அறியற்பாற்றாம்.

இனிப் பாட்டுச் சொற்சுருக்கமும் பொருட்பெருக்கமு முற்று சைதழுவி நடப்பதனான் இன்புறுத்துமென்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/167&oldid=1579211" இலிருந்து மீள்விக்கப்பட்டது