உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை

115. கண்ணடைஇய கடைக்குங்குலான் மாஅகாவிரி மணங்கூட்டுந் தூஉவெக்கர்த் துயின்மடிந்து வாலிணர் மடற்றாழை வேலாழி வியன்றெருவி

120. னல்லிறைவன் பொருள்காக்குந் தொல்லிசைத் தொழின்மாக்கள் 7காய்சினத்த கதிர்ச்செல்வன் றேர்பூண்ட மாஅபோல வைகறொறு மசைவின்றி

125. யுல்குசெயக் குறைபடாது வான்முகந்தநீர் மலைப்பொழியவு மலைப்பொழிந்தநீர் கடற்பரப்பவு மாரிபெய்யும் பருவம்போல நீரினின்று நிலத்தேற்றவு

130. நிலத்தினின்று நீர்ப்பரப்பவு

மளந்தறியாப் பலபண்டம்

வரம்பறியாமை வந்தீண்டி யருங்கடிப் பெருங்காப்பின் வலியுடை வல்லணங்கினோன்

135 புலிபொறித்துப் புறம்போக்கி மதிநிறைந்த மலிபண்டம் பொதிமூடைப் போரேறி

மழையாடு சிமய மால்வரைக் கவாஅன் வரையாடு வருடைத் தோற்றம் போலக்

140. கூருகிர் ஞமலிக் கொடுந்தா ளேற்றை யேழகத் தகரோ டுகளு முன்றிற் குறுந்தொடை நெடும்படிக்காற் கொடுந்திண்ணைப் பஃறகைப்பிற் புழைவாயிற் போகிடைகழி

147

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/180&oldid=1579319" இலிருந்து மீள்விக்கப்பட்டது