51
5.
7. முல்லைப்பாட்டு
.
நனந்தலை யுலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப் பாடிமிழ் பனிக்கடல் பருகிவல னேர்பு
கோடுகொண் டெழுந்த கொடுஞ்செல வெழிலி பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை, யருங்கடி மூதூர் மருங்கிற் போகி
யாழிசை யினவண் டார்ப்ப நெல்லொடு நாழி கொண்ட நறுவீ முல்லை
10. யரும்பவி ழலரி தூஉய்க்கை தொழுது பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்பச், சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றி னுறுதுய ரலமர னோக்கி யாய்மக
15
66
ணடுங்குசுவ லசைத்த கையள் “கைய
கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்த்தர வின்னே வருகுவர் தாய” ரென்போ
ணன்னர் நன்மொழி கேட்டன மதனா னல்ல நல்லோர் வாய்ப்புட், டெவ்வர்
முனைகவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து
20 வருத றலையர் வாய்வது, நீநின்
பருவர லெவ்வங் களைமா யோயெனக் காட்டவுங் காட்டவுங் காணாள், கலுழ்சிறந்து பூப்போ லுண்கண் புலம்புமுத் துறைப்பக்; கான்யாறு தழீஇய வகனெடும் புறவிற்