பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எந்தச் சட்டப் புத்தகத்திலேயும் செக்ஷன் இல்லை. ஒரே செக்ஷன் அவனுக்குக் கலியாணம் செஞ்சு வைக்கிறதுதான். அவனிடம் ஒபினியன் கேட்பதற்காக அவனுடைய அறைக் குள் போனேன். அவன் மறுப்புச் சொல்லவில்லை. ஆல்ரைட்" என்று சொல்லி விட்டான். ஆனல் அவள்? "அவனே வந்து, சித்தி, எனக்குப் பெண் பார்க்க வாங்க என்று சொன்னத் தான் நான் வருவேன். பொண்ணைப் பார்ப் பேன்'- என்கிருளே அவள். - கொலைகாரனை எல்லாம் சத்தம் போட்டுப்பேசி விடுதலை செய்யவச்ச பாவம், காமேஸ்வரி ரூபத்திலே எ ன் னை ஆட்டி வைக்கிறது. சரி, இதுக்கு ஒரு முறை மாடிக்குப் போவோம்னு மேலே போனேன். அவனிடத்திலே சொன்னேன். அவனே எஞ்சினி யர். வீட்டை சப்டிவிஷன் பண்ணுங்கங்கிருன். அதுக்கும் நான் ஒப்புக்கிட்டேன். கோர்ட்டிலே பிராசிகியூசன் சொல்ற எதையும் ஒத்துக் கிராத நான், வீ ட் டி லே தலையாட்டிப் பொம்மையாய்ட்டேன். திரும்ப வந்து காமுவிடம் பேசினேன். உன் புள்ளே ஒத் துக்கிட்டான். அடுத்த வாரம் பொண் பார்க்கப் போருேம். அவனே வந்து உன்னைக் கூப்பிடுவான். நீ எதுவும் த ைட சொல்லாமல் அவனிடம் இதமாகப் பேசணும். காமேஸ்வரி நான் ஒன்றும் பயித்தியம் பிடித்தவள் இல்லை. சைகாலஜி படிச்சு பாஸ் பண் ணியிருக்கேன். எனக்கு அழகு இருக்கு. எனக் குப் பணம் இருக்கு. பி ன் னே ஏன் நான் ஒரு கிழவனுக்கு வாழ்க்கைப் பட்டேன்னு நினைக்கலாம், அதுலே தான் என் லட்சியம் இருக்கு. நான் காலேஜிலே படிக்கிறப்போ கோபி நாத்தை விரும்பினேன். அவனுடைய புத்திசாவித்தனத்தை 101.