பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகப் பேசுவதில்லை. பெட்டகத்துச் சாவி, உக்கிராணச் சாவி எப்போதுமே என்னிடம்தான் இருக்கும், இரண்டு சாவிகளையும் அத்தை என்னிடமிருந்து நேற்று வாங்கிக் கொண்டார்கள்.” 'அம்மா, பாதுகாப்பிற்காக வாங்கிக் கொண்டிருப்பார்கள். வேறு எதுவும் காரணமிருக்காது’ என்று கனிவாகச் சொன்னன் கண்ணப்பன். 'நீங்கள் எப்போதுமே இப்படித்தான். எல்லாவற்றையும் மூடிமூடி மறைப்பீர்கள்” என்று முணுமுணுத்தாள் கண்ணு. 'உனக்கு ஏதாவது காரணம் தெரிந்தால் .ெ சா ல் லு! அம்மாவை நானே கேட்கிறேன்' என்ருன் கண்ணப்பன். "ஆறு வருஷமாக என்னிடமிருந்த சாவிக் கொத்து திடீ ரென்று ஏன் கைமாற வேண்டும்? பேரன் மேலே வந்த பிரியம் சின்ன மருமகள் மீது தாவிவிட்டது! இதுதான் காரணம்:கண்ணு இவ்வளவு கடுப்பாக என்றைக்கும் பேசியதில்லை. 'விஷயத்தை இப்படி விளக்கமாகச் சொன்னல் தானே எனக்கும் புரியும்? அம்மா உன்கிட்டே இருந்த சாவிக் கொத் தைப் பிடுங்கி மீனவிடம் கொடுத்துவிட்டார்கள்; அவ்வளவு தானே?” “உங்களுக்கு இது சாதாரணமாகத் தெரியலாம்; ஆனல் எனக்கு அப்படி இல்லை!” 'உனக்கு அவமானமாகத் தெரிகிறது என்கிருய்! அந்த அவமானமும் என்னல்தான் வந்தது என்று எனக்கு இடித்துக் காட்டுகிருய்!” . கண்ணு இதற்குப் பதில் சொல்லவில்லை. வாய்விட்டு அழ ஆரம்பித்துவிட்டாள். 'கண்ணு, உன் நோக்கம் எனக்குப் புரிகிறது, என்அம்மா வுடைய மனமாற்றமும் எனக்குப் புரிகிறது. உனக்குக் குழந்தை இல்லாததால் உன் மீதுள்ள பிரியமெல்லாம் மீனவின் பக்கம் II