பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'என்ன இருந்தாலும் நீ தான் மூத்த மருமகள். அ ைத யாராலும் குறைத்துவிட முடியாது. மீன எத்தனை பிள்ளைகளேப் பெற்ருலும் இந்த வீட்டில் உனக்குள்ள உரிமை அவளுக்கு வந்து விடுமா, அல்லது அவள் தான் உனக் கு மூத்தவளாகிவிடப் போகிருளா? - . - . இதைத் தவிர வேறு சமாதானத்தை கண் ண ப் பளு ல் சொல்ல முடியவில்லை. 'உங்கள் சமாதானம் உங்களுக்கு வேண்டுமென்ருல் சரி யாகப்படலாம். வயிறு எ ரிகிறது என்கிறேன், நீங்களோ.-- வாழைப்பழத்தைச் சாப்பிடு சரியாகிவிடும் என்கிறீர்கள்.” 'கண்ணு, நீ வருத்தப்படுவதிலே நியாயம் இருக்கிறது. ஆல்ை உன் வருத்தம் உடனடியாகத் திரக்கூடியதா? இத்நிற்கு மருந்து கடைவீதியில் கிடைக்குமென்ருல் என்ன விலை கொடுத் தும் வாங்கி வந்து விடுவேனே.” - - - 'இரும்புப் பெட்டியில் பணம் இருந்தால்தான் அதற்குப் பெயர் பெட்டகமாம்! இல்லாவிட்டால் அது வெறும் இரும்பு தானம். அத்தை அடிக்கடி இப்படி என்னே இடித்துக் காட்டிப் பேசுகிருர்கள்!” உனக்கிருக்கும் மனத்தாங்கல் எனக் கும் இருக்கிறது. ஆனல் உன்னைப் போல் என்னல் வெளிக்காட்டிக் கொள்ள முடியவில்லையே! பெண்கள் வீட்டுக்குள் சண்டையிட்டுக்கொண் டால் கொஞ்ச நாளில் கூடிக்கொள்வார்கள். அதுவே ஆண்கள் மத்தியில் வந்துவிட்டால் பாகப் பிரிவினை வரை போய்த்தான் நிற்கும்! இந்தப் பிரச்சினையால் எனக்கும் தம்பிக்கும் அபிப் பிராயபேதம் வந்துவிடக் கூடாதே என்றுதான் பார்க்கிறேன். எதற்கும் ஒரு முடிவு வரும். அதுவரை காத்திருப்போம்” என்று கண்ணப்பன் கண்ணுவின் தோளைத் தொட்டு ஆறுதல் சொன் இந்தச் சமயத்தில் கண்ணப்பனின் தந்தை முத்துக்கருப்பர் உள்ளே வந்தார். - 13