பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விட்டு நீங்கவில்லை. கொச்சித் துறைமுகத்தில் வேலை பார்க்கும் தமிழர்களிடத்தில் அவன் கொடுக்கல் வாங் க ல் பண்ணிக் கொண்டே தமிழ் ப் பணியிலும் ஈடுபட்டான். நாளடைவில் துறைமுகத் தமிழர்களின் தலைவனகி விட்டான் கண்ணப்பன். கொச்சித் துறைமுகத் தமிழர்கள் மத்தியில் எழும் குடும்பச் சண் டைகள் முதல் பெரிய தகராறுகள் வரை கண்ணப்பன் தலையீடு தேவைப்பட்டது. கண்ணப்பன், காலக்கிரமத்தில் தமிழர்களின் அன்பால் கண்ணப்பர் ஆகிவிட்டான். கண்ணப்பர் இங்கு இருக் கும் வரை மலையாளத் தமிழர்கள் மத்தியில் ஒற்றுமை குறை யாது என்ற நம்பிக்கை கொச்சியில் ஒவ்வொரு தமிழ ரிை ன் உள்ளத்திலும் வேரூன்றி இருந்தது. புகழ் இருக்கிறதே அது இலக்கியத்தில் வரும் காதலைப் போன்றது. அரசகுமாரியின் ஆசை ஆண்டியைத் தேடி அலையும்; பிரபு வீட்டுப்பிள்ளை பிச்சைக்காரியைச் சுற்றி வட்டமிடுவான். அதைப் போலத் தான் புகழும்! புகழை விரும்பிச் செயல்படு வோருக்கு அது கிட்டாது. புகழ் யாரை விரும்புகிறதோ, அது அவனைத் தேடி அலைந்துகொண்டிருக்கும். கண்ணப்பன் கதையும் அப்படித்தான். அவன் அங்கு பைனன்சிங் கம்பெனி வைக்கப் போனன். அங்கே தலைவர் பதவி அவன் காலடியில் காத்துக் கிடந்தது. - - கண்ணுத்தாளுக்கு இவையெல்லாம் பெரிதாகப் படவில்லை. அவளுக்கு அவள் விடுத்து வந்த சபதம்தான் அவள் மனக்கண் முன் வந்து படமெடுத்து ஆடிக்கொண்டே இருந்தது. வட்டித் தொழிலில் போட்ட மூலதனம் முறையாகத் திரும்பவில்லையே என்ற கவலையை விட வயிற்றில் குழந்தை உருவாகவில்லையே என்ற கவலைதான் அவள் உள்ளத்தில் மேலோங்கி நின்றது. 'கண்ணு!” - 'இருக்கிறேன்; நான் எங்கே போகப் போகிறேன்' 'துறைமுகத்திலிருந்து வேறு யாராவது வந்தார்க்ளா?” 'இரண்டு பேர் வந்து வட்டிப்பணத்தைக் கட்டிவிட்டுப் போனர்கள்!” - - 19