பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"நான் அதையா கேட்டேன்? யாராவது தமிழ்ச்சங்கம் சம்பந்தமாக வந்தார்களா என்று கேட்கிறேன்.” இது கண்ணுத்தாளின் மனதைச் சுட்டது. "என்னங்க நீங்களும் தொழிலைக்கவனிக்காமல் இப்படியே அலைந்தால் கம்பெனி என்ன ஆகும்? "நீ சொல்லுவதும் உண்மைதான்; அதற்காக அதிலேயே மூழ்கிவிட முடியுமா? எனக்கு மட்டும் நான் இதைச் சொல்லிக் கொள்ளவில்லை. உனக்கும் சேர்த்துத்தான் சொல்லுகிறேன். நீயும் வேலை இல்லாத நேரத்தில் தமிழர் வீடுகளுக்குப் போய் வரலாம்.’’ 'எனக்கு வெளியில் போ க ஆசைதான். ఆ:అమ போய் விட்டு வந்ததும் வீட்டில் தூக்கம் வராமல் நான் தவிக்கிறேன்.” அது என்ன அப்படி ஒரு வியாதி?” "குழந்தைகளைக் கண்டாலே எனக்கு மயக்கம் வந்து விடு கிறது! தலை சுற்றுகிறது; மகாலட்சுமி போல் இருக்கிருய், பக வான் உனக் கு ஒரு குழந்தையைக் கொடுக்காமல் இப்படிச் சோதிக்கிருனே என்று வேறு கேட்கிருர்கள். அது ஒரு பக்கம் என் நெஞ்சைத் துளைக்கிறது.” - - கண்ணப்பன் சிரித்தான். ‘என்னத்தான் சிரிக்கிறீர்கள்! நான் சொல்லுவது உங்க ளுக்கு வேடிக்கையாக இருக்கிறதா?’ - 'இல்லை கண்ணு உன் பேச்சு ஒரு அறிஞனின் தத்துவத்தை எனக்கு நினைவுபடுத்துகிறது. ஏழைகளுக்கும் வைரத்திற்கும் ஏன் பகை வந்தது தெரியுமா? ஏழைகளுக்கு அது கிடைக்காத தால் அவன் வைரத்தைப் பார்த்துக் கோபப்பட ஆரம்பித்தான் என்று அந்த அறிஞர் கூறியிருக்கிரு.ர்.” - - - இந்த நேரத்தில் வாசல் கதவை யாரோ தட்டினர்கள். கண்ணுத்தாள் கதவைத் திறந்தாள். தபால்காரன் ஒரு க டி த த் ைத ப் போட்டு விட்டுப் போனன். அந்தக் க்டிதம் கண்ணத்தாளுக்கு அவள் தகப்பனர் எழுதியது. 20