பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாடும் மகிழ்ச்சிப்பெருக்கு ஒரே மாதிரியானதுதான் கண்ணப் பன் இப்படி அடுக்கிக் கொண்டே போனன். "அத்தான் நீங்கள் எதைத்தான் சொல்லுங்கள்; அதெல் லாம் படிக்கத்தான் பயன்படுமே தவிர நடைமுறைக்கு ஒத்து வராது.” - - - 'எனக்கும் பொழுது போக வேண்டும்; உனக்கும் கவலை ஒழிய வேண்டும். கண்ணு நீ இப்போது என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிருய்? என்ன இருந்தாலும் வளர்ப்புக் குழந்தை நம் வயிற்றில் பிறக்கும் குழந்தைக்கு ஈடாகுமா என்கிருயா அல்லது அவள் மலடி என்ற அவச்சொல்லே அழித்துக் கொள் வதற்காகக் குழந்தை கேட்கிருயா? 'ஆண் பிள்ளைகளைப் போல பெண்கள் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசிவிடமாட்டார்கள். அப்படிப் பேசவும் கூடாது. ஆண்கள் கலகலப்பாகப் பேசில்ை அவர்களை விஷய மில்லாதவர்கள் என்பார்கள். பெண்களும் அப்படியே பேசில்ை 'இவள் சுத்த வெகுளி என்று இகழ்ந்து தள்ளிவிடுவார்கள். புரு ஷனுக்குத் தெரியா த ரகசியங்கள் கூட ஒரு பெண்ணிடம் இருக்கவேண்டும். அப்படி இருந்தால்தான்.அவள் பெண். விரித்த புகையிலையும், சிரித்த பெண்ணும் ஆகாது என்று சொன்னது எதற்காக? கண்ணுத்தாளும் விட்டபாடில்லை. "அது சரி...... இன்றைக்கென்ன இவ்வளவு தத்துவார்த்தங் களைப் பொழிந்து தள்ளிக் கொண்டிருக்கிருய்? 'இது நீங்கள் படித்துவிட்டுப் பேசும் வேதாந்தமல்ல; உண் மைகளை நான் சொல்லுகிறேன். ஒரு பெண்-அதுவும் குழந் தைப் பேற்றுக்காக தவம் கிடக்கும் ஒரு பெண் என்ன நினைக் கிருள், அவள் மனம் என்ன பாடுபடுகிறது என்பதை புருஷன் தெரிந்துகொள்ள வேண்டாமா?’ - 'நீ உன் வாதத்தில் பிடிகொடுத்து விட்டாய்! புருஷனுக்குத் தெரியாத ரகசியம் ஒரு பெண்ணிடம் இருக்கலாம் என்கிற போது ஊருக்குத் தெரியாத ரகசியம் ஒரே குடும்பத்திற்குள் இருப்பது தவறில்லையே? 22.