பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைகள்?” - "உனக்கு எத்தனை குழந்தைகள்? முதலில் நீ சொல்லு!” வைத்தியம் பார்க்க வரும் பிள்ளைகள் தான் என் பிள்ளை கள்!' -கொரியன் பெருமூச்சோடு இப்படிச் சொன்னன். டோக்டர் என் கதிதான உன் கதியும் நான் எதிர்ப்பார்க்க வில்லை கொரியன். நான் உன்னைச் சந்திக்க வந்ததே இந்தக் கவலையைத் தீர்த்துக் கொள்ள ஏதாவது மார்க்கமுண்டா என்று கேட்டுத் ெ தரிந்துகொண்டு போகத் தான்!” -கண்ணப்பனுக்கு வார்த்தைகள் சரியாக வரவில்லை. "என் நிலைமை உனக்கு நேர்ந்துவிடக் கூடாது என்று நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். சில நேரங்களில் பிரார்த்தனை களும் பயனற்றுப் போய் விடுவதுண்டு என்னைப் பொறுத்த வரையில் இனி நான்தனி மரம்தான். என் மனதில் இருந்த ஆசை கள் இற்றுத் துாளர்கி விட்டன. கடவுள் எனக்கு பனைமரத்தைப் போல் நெடிய ஆயுளேக் கொடுத்தால் நான் ஆலமரத்து நிழலைப் போல் பலருக்கு பயன்படுவேன்!” "இந்த விஷயம் உன் மனைவிக்குத் தெரிந்தால் அவர்கள் வேதனைப்பட மாட்டார்களா?” “எப்படியோ அவளுக்குத் தெரிந்துவிட்டது. அதல்ை அவள் கவலைப்பட்டுக் கவலைப்பட்டு எலும்புக்கூடாகி காற்ருேடு கலந்து விட்டாள் கண்ணப்பா!' “எப்போது இதெல்லாம் நடந்தது? எப்படி அவர்களுக்குத் தெரிந்தது?” - புருஷனுக்கும், மனைவிக்குமிடையே கூட சில ரகசியங்கள் இருக்க வேண்டும் என்பதை என் மனைவியின் மரணத் தின்போது தர்ன் உணர்ந்தேன். திருமணமாகி மூன்ருண்டுகளுக்குப் பிறகு என் உள்ளத்தில் சிறு அருவருப்பு ஏற்பட்டு கேரளத்திலுள்ள ஒரு பெரிய டாக்டரிடம் நானும் என் மனைவியும் ரத்தப்பரி சோதனை செய்து கொண்டோம். பதினைந்து நாட்கள் வரை அவரிடமிருந்து எனக்கு எந்த ரிசல்ட்டும் வரவில்லை. நான் 25