பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்பன் நெற்றியைச் சுளித்தான். *நீ ஏன் நெற்றியைச் சுளிக்கிருய்? உனக்கும் அப்படி இருக் குமோ என்ற அச்சம் தானே? என்று வினவினன் கொரியன். அப்படி ஒரு பீதி எனக்கு! உனக்கு ஏதாவது காரணம் சொன்னுரா டாக்டர்?’ - 'நானே நேரில் சென்று கேட்ட பின்புதான் அவர் காரணத் தைச் சொன்னர். எ னது ரத்தம் அடியோடு முறிந்து போய் விட்டதாம். நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன். ஒரு மனிதனின் உடலுறுப்புக்கள் ஒரு விமானத்தின் எஞ்சினை விட துணுக்க மானவை என்கிருர்அந்த டாக்டர். என்னுடைய ரத்தம், எனது திருமணத்திற்கு முன்பே முறிந்து விட்டது என்கிருர் அவர். எனக்கு அப்போதே விவரம் தெரிந்திருந்தால் நான் திருமணமே செய்துகொண்டிருக்க மாட்டேன். நம் நாட்டில் எல்லோரும், திருமணத்திற்குப் பிறகுதான் வாழ்க்கையே துவங்குகிறது என்று நினைக்கிருர்கள். அதனல் விளைந்த வினையைப் பார்த்தாயா? கண்ணப்பன் பதில் சொல்ல முடியாமல் திணறினன். அவ னுக்கு குடை ராட்டினத்தில் உட்கார்ந்து சுற்றுவது போலிருந் திது. . - - 'சிங்கம் போலச் சீறிப்பாயக்கூடியவன். இன்று எப்படியோ போய் விட்டானே! அவன் பேச்சில் இருந்த கம்பீரம், அவன் குரலில் இருந்த மிடுக்கு - எல்லாமே இருந்த தடம் கூடத் தெரி யாமல் அழிந்து விட்டதே?' என்று கண்ணப்பன் மனதுக்குள் ளேயே நினைத்துக் கொண்டான். - "நீயும் அந்த டாக்டரிடம் சோதித்துக்கொண்டால் நல்லது என்று நினைக்கிறேன். முடிவு செய்ய வேண்டியது உன் உரிமை!’ “எனக்கும் அதுதான் முடிவாக இருந்தால் என்ன செய்வது கொரியன்? கண்ணப்பன் நடுக்கத்துடன் கேட்டான். 'முடிவு அது தான் என்ருல் அதை எப்படி மாற்ற முடியும்? அதைத்தான் விதி என்றும், தலையெழுத்து என்றும் மதவாதிகள் கூறுகிரு.ர்கள். என் தலையெழுத்து இப்படி! அதற்காக நான் சனி யும் புதனும் எண்ணெய் தேய்த்துக் குளித்திருந்தால் அந்தத் தலையெழுத்து அழிந்து போயிருக்குமா?’ கொரியன் இப்படி 27