பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேசிக்கொண்டிருக்கும் போதே கண்ணப்பனின் உ ள் ள ம் கண்ணுத்தாளைத் தேடி ஓடியது. 'அப்படியானல் அடுத்த ஞாயிற்றுக்கிழமை என் மனைவி யையும் அழைத்துக்கொண்டு வந்து விடட்டுமா?” 'தேவை இல்லை என்பது என் கருத்து. உன் மனைவிக்குத் தெரியாமலே நீ சோதித்துக்கொள்வதுதான் உன் எதிர்காலத் திற்கும் பாதுகாப்பு. உ ன க்கு ஆல் ரைட் என்று டாக்டர் சொல்லிவிட்டால் அதற்குப்பிறகு வேண்டுமானல் உன் மனைவி யைச் சோதிக்கலாம். இந்த விஷயம் உன் மனைவிக்குத் துளியும் தெரியக்கூடாது. ஏனென்ருல் பெண்கள்பிறவியில்தான் கோழை கள்! வாழ்க்கையில் முடிவெடுப்பதில் வேகமானவர்கள். தவறு யார் பக்கம் என்று யோசிக்காமலே தற்கொலைக்கும் தயராகி விடுவார்கள். சாவது எளிது, ஆனால் சாவை நினைப்பதுதான் பயங்கரமானது- என்ற தத்துவங்களெல்லாம் தென்னுட்டுப் பெண்களிடம் தோற்றுப்போய்விட்டன". டாக்டர் கொரியன் தன் மனைவியின் அகால மரணத்தின் மூலம் பெண்களைப்பற்றி ஒரு தீர்க்க மான ஆராய்ச்சியையே செய்து முடித்தவரைப் போலப் பேசினன். கண்ணப்பன் சோதனைக்குத் தயாரன்ை. சோதனைக்குப் பிறகு அந்தப் பெரிய டாக்டர் பல கேள்விகளைக் கண்ணப்ப னிடம் கேட்டார். - “உங்களுடைய பால்ய காலத்தை எங்கே கழித்தீர்கள்? 'கண்டியில் பத்து வருஷங்கள் இருந்தேன்!” "அங்கே உங்களுக்கு என்ன பொழுதுபோக்கு?

  • -தமிழ்ப்பணி, தேகப்பயிற்சி, மல்யுத்தம்- இவைகள்தான் எனது பொழுதுபோக்குப் பணிகள்!'

"அந்தக் காலங்களில் நீங்கள் ஏதாவது மருந்து, மாத்திரை கள் சாப்பிட்டதுண்டா!' வடஇந்தியாவில் இருந்து வந்த புகழ்பெற்ற அந்தக் குஸ்தி 28 " نهر