பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயில்வானிடம் நாங்கள் மல்யுத்தம் பயின்ருேம். அவர் எங்கள் உடல் வளத்திற்காக தினசரி கொஞ்சம் லேகியம் கொடுப்பார். அப்படியே நாங்கள் ஆறு மாதங்கள் சாப்பிட்டோம்.' பெரிய டாக்டர் புருவத்தை நெறித்தார். பிறகு டாக்டர் கொரியனை நிமிர்த்து பார்த்தார். "மிஸ்டர் கண்ணப்பன், அந்த லே கி யம் சாப்பிட்டபின் உங்கள் உடலில் ஏதாவது மாற்றம் தெரிந்ததா?” "சதை இறுகியது. அது எங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத் தது. உடல் பளபளத்தது. அது எங்க ளு க் கு ஒரு விதமான உற்சாகத்தை வழங்கியது!’ - - இதைக் கேட்டதும் பெரிய டாக்டர் உ. த டு க ள் விரிய லேசாகச் சிரித்துக் கொண்டார். - "என்ன டாக்டர் நீங்களாகச் சிரித்துக் கொள்கிறீர்கள்? கொரியன் உரிமையோடு கேட்டான். 'ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லையே மிஸ்டர் Gagnrif பன்!’ - - கண்ணப்பன் லக்கிமேன்! இல்லையா டாக்டர்!” "நான் அப்படிச் சொல்லவில்லை. அப்படி இருந்தால் நான் ஏன் சிரிக் க வேண்டும்? உங்கள் ரத்தத்திற்கும் இவருடைய ரத்தத்திற்கும் ஒரு சதவிகிதம் கூட வித்தியாசம் இல்லாமல் இருக்கிறதே! கூடப்பிறந்த சகோதரர்களுக்குக்கூட இப்படி ஒரு ஒற்றுமையைப் பார்க்க முடியாது!” இதைக் கேட்ட தும் கண்ணப்பனுக்கு முகமெல்லாம் வியர்த்துவிட்டது. அவன் மயக்க நிலையை அடைந்து விட்டான். "அப்படியாளுல் இவனுக்கும் புத்திர பாக்கியம் இருக்காது என்கிறீர்கள்! இல்லையா டாக்டர்!’ - "ஆம், இவரும் உன்னைப் போல் இருக்கவேண்டியவர்தான். 29