பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெருப்பிலே வாட்டினல் அது எப்படி உருகிவிடுகிறதோ அது போல்த்தான் துன்பத்தால் தாக்குண்டால் மனித ம ன மும் கருதிவிடுகிறது. . . . . * கண்ணுத்தாள் பதினைந்து நாட்கள் தன்ளுேடு இல்லாதது, உலகத்தில் எல்லோரும் அவனைக் கைவிட்டு விட்டதைப்போல் கண்ணப்பனுக்குப்பட்டது. பைனன்சிங் கம்பெனிக்கு அவன் ஒழுங்காகப் போகவில்லை. தினசரி வசூலை முறையாகக் கவனிக்க வில்லை. கடை, வரவு செலவில் அவன் கவனம் சிறிதும் நாட வில்லை. வெளியூரில் படிக்கும் மாணவன் ஒவ்வொரு நாளும் பெற்றேர்களிடமிருந்து பணம் வருகிறதா என்று தபால்காரனே எதிர்பார்த்திருப்பதைப் போல கண்ணப்பன் ஒவ்வொரு நாளும் கண்ணுத்தாளின் வரவை எதிர்பார்த்திருந்தான். அன்று எதிர்பாராத வகையில் அவனுக்கு ஒரு கடிதம் வந்தது. அது கண்ணுத்தாளின் தகப்பனர் எழுதியது. தனக்கு உடல் நல மில்லாததால் கண்ணுத்தாள் இன்னும் கொஞ்ச நாளேக்கு ஊரில் இருந்து விட்டு வரட்டும் என்றுதான் தனது மாமனர் எழுதியிருப்பார் என்று கண்ணப்பன் நினைத்தான். ஆனல் அந்தக் கடிதம் ஒரு பயங்கரமான வெடி குண்டோடு வந்திருந்தது. கடிதத்தைப் படித்ததும் அவன் தலைசுற்றியது. 'அன்புள்ள மாப்பிள்ளைக்கு, - எப்போதும் காணுத மகிழ்ச்சியோடு நான் இந்தக் கடி தத்தை எழுதியிருக்கிறேன். பல வருஷங்களாக நான் கும்பிட்ட தெய்வங்கள் என்னைக் கைவிட்டு விடவில்லை. ரதிக்கிளி போன்ற என் மகள் ஊரார் பேச்சுக்கு ஆளாகி விட்டாளே என்று நான் ஒவ்வொரு நாளும் கடவுளே நிந்தித்துக் கொண்டிருந்தேன். எதற்கும் ஒரு முற்றுப்புள்ளி உண்டல்லவா? அந்த முற்றுப்புள்ளி இப்போது என் மனக்கவலைக்கும் வந்துவிட்டது. நீங்கள் மலை யாள தேசத்திற்குப் போன முகூர்த்தமாகக் கண்ணுத்தாள் கருவுற்றிருக்கிருள். அங்கே உள்ள தெய்வங்களுக்கெல்லாம் நீங்கள் நேரில் சென்று காணிக்கை செலுத்த வேண்டும். கண்ணுத்தாளின் திருமணத்திற்குப் பிறகு என் வீட்டில் 35