பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடக்கப்போகும் பெரிய விசேஷம் கண்ணுத்தாளுக்கு நடைபெற இருக்கும் வளைகாப்பு விழாதான். அதற்கு நாள் குறிப்பதற்கு உங்கள் அபிப்பிராயத்தை அறியத்தான் இந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறேன். ஐந்தாவது மாதத்தில் அல்லது ஏழாவது மாதத்தில் தான் வளைகாப்பு நடத்துவது வழக்கம், உங்கள் விருப்பம் அறிந்துதான் விழாவிற்கு தேதி குறிப்பிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன், - இப்படிக்கு. நாராயணன் செட்டியார்.” கடிதத்தைப் படித்து முடித்ததும் தலையிலே மண்ணெண் ணையை ஊற்றிக்கொண்டு நெருப்பை வைத்துக்கொள்ளலாம் போல் தோன்றியது கண்ணப்பனுக்கு. பல ஆண்டு காலமாக சேகரித்து வைக்கப்பட்ட உண்டியல் திருட்டுப் போனதைப் போல, உழைத்துச் சம்பாதித்துக் கட்டிய வீட்டில் இடி விழுந்து விட்டதைப் போல அவன் மனம் புழுவாகத் துடித்தது, "குழந்தை ஆசையால் குடும்பத்தின் ஆணி வேரையே கிள்ளி எறிந்து விட்டாளே! நான் இல்ல்ாத நேரத்தில் வீட்டில் ஏதாவது தப்பு நடந்திருக்குமோ? ச்ேச்சே! பல ஆண்டு காலம் என் ரத்தத்த்ோடு ரத்தமாகப் பழகியவள் அப்ப்டி நடந்திருக் கவே மாட்டாள்.” கலங்கிய குட்டையில் பூச்சி, புழுக்கள் மிதப்பதைப் போல அவன் உள்ளத்தில் பல சந்தேகங்கள் அணி வகுத்துத் தலை தூக்கின. - - கண்ணப்பன் உள்ளத்தில் மனப்போராட்டம் வஇலுத்தது. கொரியனின் மனைவி உத்தமி; மகாலெட்சுமி. அவளுக்கு அவன் கோயில் கட்டிக் கும்பிட வேண்டும். தனக்குப் பிள்ளை பிறக்காது என்றதும் அவள் தன்னையே மாய்த்துக்கொண் டாள்.' - - - - - "ஆனால் இவள்? சுத்தமான சுயநலக்காரி. த ன க் கு ப் பிள்ளை வேண்டும் என்பதற்காக என் உயிரையே வாங்க எண்ணி விட்டாள். ஊரில் இப்படிப்பட்ட தவறுகள் செய்ய முடியாது. என்பதால்தான் வீட்டை விட்டுப்போகவேண்டும் என்று அடம் பிடித்திருக்கிருள்.” - - 36