பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் கிடைத்த மறு கணமே சசிகுமார் திருநெல்வேலிக் குச் சென்றன். அங்கே தக்க உதவியோடு சசி அந்த விபச்சார மாளிகைக்குப் போனன். ராசாக்கிளி வழக்கம்போல இன்முகத் தோடு சசியை வரவேற்ருன். முதலில் சசிக்கு டீ வந்தது-அ டு த் து வெற்றிலைபாக்குத் தட்டு வந்தது. சசி எதையும் தொடவில்லை. அவனது விழிகள் கதவு இடுக்குகள், ஜன்னல் திரைகள்-இவைகளையே துளாவிக் கொண்டிருந்தன. 'தம்பி மாடிக்குப் போகலாமா? பரிவோடு கேட்டான் ராசாக்கிளி. கூட வந்தவர்களிடம் ஒரு சகிக்கினை கொடுத்து விட்டு சசி, ராவுத்தரைப் பின் தொடர்ந்து மாடிக்குப் போனன். ஒரு சின்ன அறை; அதில் இரண்டு பேர் படுக்கக்கூடிய ஒரு கட்டில். அந்தக் கட்டிலைச் சுற்றித் தழுவியபடி ஒரு ரோஜா நிறக் கொசு வலை. இதெல்லாம் சசிக்கு புது அனுபவம். துப்பறியும் நாயைப் போல் அவன் மோப்பம் பிடித்துக்கொண்டு சென்ருனே தவிர த ப் புச் செய்யப் போகிருேம் என்ற எண்ணத்திற்கு அவன் உள்ளத்தில் அணுவளவும் இடம் கொடுக்கவில்லை.

    • (3լյլհl**

ஒருத்தி வந்தாள். 'இவளைப் பிடிக்கிறதா? இவள் மைசூர்க்காரி' பிடிக்கவில்லை என்பதற்கு அறிகுறியாக சசி தலையை ஆட்டி

    • LIITLILIIT !”

இன்னுெருத்தி வந்தாள் 'இவள் கும்பகோணம், நன்முக பரதநாட்டியம் ஆடுவாள்! 53