பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஇவளேயும் எனக்குப் பிடிக்கவில்லை. வே று ஆள் இருக் கிறதா?” - - ராசாக்கிளியிடம் யாரும் இப்படிப் பேசியதே இல்லை. கான் பித்தவளை அழைத்துக்கொண்டு கட்டிலறைக்குப் போய்விடுவது தான் வருகிறவர்களின் பழக்கம். 'தம்பி, நீ சென்ற மாசமே வந்திருக்க வேண்டும். சுபத்ரா என்ற ஒரு மலையாளப் பெண் இருந்தாள். ரதிகூட அவளுக்கு வேலைக்காரியாகத்தான் இருக்கமுடியும். அவள் ஒடிப்போய்விட் டாள்" என்று ராசாக்கிளி சொன்னபோது சின்னக் குழந்தை வைரக்கடுக்கனைத் தண்ணீரில் எறிந்துவிட்டதைப் போல சசி திகைத்துவிட்டான். 'என்ன தம்பி இப்படிப் பார்க்கிறே? 'அவளைத்தான் நான் தேடி வந்தேன்; ஆனால் அவள் பறந்து விட்டாள். அவள் கெட்டுப்போய் விட்டாளா? * - இதைக் கேட்டு ராசாக்கிளி பலமாகச் சிரித்தான். அது பழைய காலத்துப் பாதுஷாக்களின் சிரிப்பைப்போல சுவர்களில் மோதி எதிரொலித்தது. என்ன தம்பி இப்படிக் கேக்கிறே! கழுதைகள் காணுமல் போன குட்டிச்சுவர்களில் பார்க்கணும்; காவடிகள் காணுமல் போனல் குன்றக்குடியிலே தேடணும்; அது மாதிரித்தான் இந்த மாளிகையும். கெட்டுப்போன பெண்கள் இங்கே வருவாங்க; இல்லாட்டா கெட்டுப்போக விரும்புகிற பெண்கள் இங்கே வரு வாங்க இங்கே வந்திங்கன்ன இரண்டு வகையானவர்களையும் சந்திக்கலாம்.” - இதைக் கேட்டதும் சசிக்குத் தலை சுற்றியது. "சுபத்ரா முறிந்த பாலாகிக் கெட்டுப்போய் விட்டாளா? "இருக்காது; அப்படியானல் அவள் ஏன் இங்கிருந்து ஒட வேண்டும்? நெய்யில் பால் மறைந்து கிடப்பது உண்மையானல் செத்துப்போன பால்தான் நெய்யாகிறது என்பதும் உண்மை, 54