பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆகையால் என் தங்கை நெய்யாவதற்காக ஒடிப்போயிருக்க லாம் அல்லவா? இந்த மனப்போராட்டத்துடன் சசி அந்த மாளிகையை விட்டு வெளியேறினன். 'கண்ணு' "அத்தான்’ "இதோ புத்தகம் ஒரு கர்ப்ப ஸ்திரீக்கு என்னென்ன அறி குறிகள் தோன்றும் என்பதெல்லாம் இந்தப் புத்தகத்தில் இருக் கின்றன. நீ இதைப் படித்து அதன்படி நடந்து கொள்ளவேண் டும். சில பேர் வாழ்க்கை முழுவதும் நடித்துக் கொண்டிருக்கிருர் கள். ஆனல் நீயு ம் நானும் லட்சியத்திற்காக கொஞ்ச நாட் களுக்கு நடிக்கவேண்டும் என்று செல்லமாக அவள் கன்னத்தில் தட்டினன். பசுவின் உடம்பெல்லாம் பரவியிருக்கும் ரத்தம்தான் மடுவிற்கு பாலாக வந்து பயனளிப்பதுபோல் பெண்ணின் உடம் பெல்லாம் துளிர்த்து நிற்கும் இளமை அ னை த் து ம் ஒன்று திரண்டு அவள் கன்னத்தில் குவிந்து தன் கணவனே மகிழ்விக் கிறது. அதிலும் கண்ணுத்தாள் தேவசுந்தரி மாதிரி அழகுடை யவள். ந டு த் த ர வயதுக்கு அவள் வந்துவிட்டிருந்தாலும் குழந்தையில்லாத காரணத்தால் குன்ருத இளமையோடு விளங் கிள்ை. அவளது உடலின் ஒவ்வொரு பகுதியும் ஜல்லிக் கட்டுக் காளையின் அவயங்களைப்போல் திண்வெடுத்து நின்றன. அரும்பு மல்லிகைகளே ஆரமாகத் தொடுத்தது போன்ற அவளது பல் வரிசை அரைகுறையாகத் தெரியும்போது திருவில்லிபுத்துரர் ஆண்டாளே தரிசனம் தருவதுபோல் இருக்கும். பீமனின் வலி மையைக் க ண் டு துரியோததிையர் பொருமைப்பட்டதைப் போல கண்ணுத்தாளின் அழகைப் பார்த்து பொருமைப்படாத பெண்களே இல்லை! கண்ணுத்தாள் அதிகமாக வெளியில் வருவதில்லை. தன் உடம்பை யாரும் புரிந்து கொள்ளும்படியாக அவள் நடந்து கொள்வதைத் தவிர்த்து வந்தாள். கள்ளத்தனமாகக் கர்ப்பம் 55