பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பீஸ் வாங்கும் பயங்கரப் பேர்வழி அவன். அவன் பேசுவதை கேட்க வேண்டுமே தவிர அவனுக்கு நாம் எதுவும் பதில் சொல்லி விடக் கூடாது. - -இன்ஸ்பெக்டர் இன்னசி முத்து உத்தியோகம் பார்க்க வந்த இடத்தில் நெளிவு சுளிவுகளே இவ்வாறு கேட்டுத் தெரிந்து கொள்ளப் பதினைந்து நாட்கள் ஆகிவிட்டன. அதற்குள்ளாக இன்னெரு மொட்டைக் கடிதம் வந்து விட்டது. இந்தக் கடிதம் முதல் கடிதத்தை விடப் பயங்கரமானது. ஆனல் முதல் கடி தத்தை எழுதிய நபரேதான் இந்தக் கடிதத்தை எழுதியிருக் கிருர் என்பதை இன்னசிமுத்து தெரிந்து கொண்டார். படிக் கத் தெரிந்த ஒருவன் படிக்கத் தெரியாதவனைப்போல் அந்தக் கடிதத்தை எழுதியிருக்கிருன். 'அன்புள்ள ஐயா, இது எனது இரண்டாவது கடிதம். பண ஆசையினால் உடனே சென்று அந்த இடத்தைத் தோன்டி எடுப்பீர் என்று கருதி மாங் கொல்லையில் புதையல் இருப்பதாகப் போன கடிதத்தில் எழுதியிருந் தேன். உண்மை அது வல்ல. இந்தக் கடிதத்தில்தான் உண்மையை எழுதியிருக்கிறேன். நான் குறிப்பிட்டிருந்த அதே இடத்தில் தங்கக் கட்டி போன்ற ஒரு இளம் பெண்ணை வெட்டிப் புதைத்திருக்கிருர் கள். தயவு செய்து தாங்கள் இதை மொட்டைக் கடிதமாகக் கருதா மல் அந்த இடத்திற்கு விரைந்து சென்று தோண்டிப் பார்த்து உங்கள் கடமையை நிறைவேற்றுங்கள். கடிதங்களில் கையெழுத்து அவசியம் என்பதைவிட அந்தக் கடிதத்தில் அடங்கியிருக்கும் உண்மைகள்தான் போலீசு இலாகாவிற்கு மிகவும் தேவையானவை. ஆகவே கடிதம் யார் எழுதியது என்ற ஆராய்ச்சியில் இறங்காமல் கடிதத்தில் கண்டுள்ள தகவலைத் துப்பறிந்து உண்மைக் குற்ற வாளியைக் கண்டுபிடிப்பீர்களென்று நம்புகிறேன். - இப்படிக்கு, மாயக்கள்ளன். -இந்தக் கடிதம் இன்ஞ்சிமுத்துவைக் கொஞ்சம் குழப்பத் தான் செய்தது. கடிதம் சரியோ த வருே அந்த இடத்தைச் 67