பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனை முதுகினிலே - ப அற்புதப் புத்தகங்கள். ஆனையின் மீதேறி - ஒருவன் அமர்ந்து படித்திடுவான். இப்படி வாகனங்கள் - மேலே ஏறிப் பலசிறுவர் அப்படி இப்படியும் - சற்றே ஆடிப் படித்திடுவார். அண்ணன் கதைபடிப்பான் - தம்பி ஆசையாய்க் கேட்டிடுவான். சின்னஞ் சிறுவரிலே - சிலர் சேர்ந்து படித்திடுவார். புல்லிலே ஒர்சிறுமி - சாய்ந்து புத்தகம் தான்படிப்பாள். கல்லிலே ஒர்சிறுவன் - அமர்ந்து கதைகள் படித்திடுவான். சிறுவர்க ளெல்லோரும் - உலகைத் தெரிந்து கொள்வதற்கே அறிவு நூல்களெல்லாம் - கதைபோல் ஆனந்தம் ஊட்டிடுமே! 131

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/135&oldid=859943" இலிருந்து மீள்விக்கப்பட்டது