பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்டோபர் மாதம் இரண்டினிலே - காந்தி அவதரித் தார்.எனப் போற்றுகிறோம். தக்கவி தத்திலே காந்தி மகானுக்குச் சகலரும் அஞ்சலி செய்திடுவோம். காந்தி பிறந்தஇவ் வாரத்தினை - நாமும் கதர்வார மாகக்கொண் டாடிடுவோம். சாந்த வடிவமான காந்திமகான் - ஆன்மா சாந்தி அடைந்திடச் செய்திடுவோம். கையினால் நூற்றது, நெய்ததுவாம் - இந்தக் கதரை அணிந்திட வேண்டுமென்றே ஐயனாம் காந்தி உரைத்துவந்தார் - இதை அகிலம் உணர்ந்திடச் செய்துவந்தார். கண்போல் கதரைக் கருதிவந்தார் - அவர் கைராட்டை யால்தினம் நூற்றுவந்தார். உண்ணா விரதம் இருக்கையிலும் - அவர் ஒருநாளும் நூற்கா திருந்ததில்லை! 133

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/137&oldid=859947" இலிருந்து மீள்விக்கப்பட்டது