பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இத்தாலி தேசத்துப் போர்க்களமாம் - அதில் எண்ணற்ற வீரர்கள் மாண்டனராம். எத்தனை யோவிரர் காயமுற்றே - அங்கு இறக்கும் நிலையில் இருந்தனராம். கைகள் முறிந்தவர், கால்கள் ஒடிந்தவர், கண்கள் இழந்தவர் பற்பலராம். 'ஐயையோ அப்பப்பா அம்மம்மா' - என்றவர் அலறி, அலறித் துடித்தனராம். தண்ணிர் கிடைக்காத காரணத்தால் பலர் சாகக் கிடந்தனர் அவ்விடத்தே. புண்களை ஆற்ற வழியுமில்லை - அந்தோ! புழுவாய்த் துடித்தனர் வீரரெல்லாம். உள்ளம் உருக்கிடும் காட்சிஇதைக் கண்டே உத்தமர் டுனான்டு என்பவரும் சொல்லொணா வேதனை உற்றனராம் - பிறர் துன்பம் துடைக்க நினைத்தனராம். 135

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/139&oldid=859950" இலிருந்து மீள்விக்கப்பட்டது