பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர் கலைக் களஞ்சிய ஆலோசனைக் குழு, பாரதியார் சங்கச் செயற்குழு. - குழந்தைக் கவிஞர் வள்ளியப்பா அறக்கட்டளை என்ற பெயரில் சர்வதேசக் குழந்தைகள் ஆண்டு விழாக் குழு (காரைக்குடி) ஒர் அறக்கட்டளையை 1980-ல் நிறுவி, காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரி நிறுவனர் திரு. இராம. பெரியகருப்பன் அவர்களிடம் ஒப்படைத்துள்ளது. இதன் மூலம், ஆண்டுதோறும் குழந்தைகளுக்கான பாட்டுப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கப் பெறுகின்றன. இவரது நூல்களில் ஆராய்ச்சிப் பட்டங்கள் : இவரது கவிதைகளை ஆய்வு செய்து மதுரைப் பல்கலைக்கழக எம்.ஃபில் பட்டம் பெற்றவர்கள்; திருவாளர்கள் வெ. கிருட்டினசாமி, கதி. கணேசன், கேரளப் பல்கலைக் கழக எம்.ஃபில் பட்டம் பெற்றவர்; திருமதி ஒ. பத்மகுமாரி. சென்னைப் பல்கலைக் கழக Ph.D. பட்டம் பெற இருப்பவர் : திருமதி அம்புஜம். திரு. வெ. கிருட்டினசாமியின் ஆய்வு நூல் ‘குழந்தைக் கவிஞரின் கவித் திறன் என்ற பெயரிலும், திரு.கதி. கணேசனின் ஆய்வு நூல் குழந்தை இலக்கியத்தில் வள்ளியப்பா ஒரு வழிகாட்டி என்ற பெயரிலும் வெளிவந்துள்ளன. வாழ்க்கை வரலாறு : குழந்தைக் கவிஞர் வள்ளியப்பா வரலாறு' எனும் 304 பக்கங்கள் கொண்ட நூல் டாக்டர் பூவண்ணனால் எழுதப் பெற்று, வானதி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. 229

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/235&oldid=860072" இலிருந்து மீள்விக்கப்பட்டது