பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:பன்மொழிப்புலவர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் 453 வில்லை. பொறாமையும் காழ்ப்பும் தலைதுாக்கி ஆடத் தொடங்கிவிடுகின்றன. தெ. பொ. மீ ; நீங்கள் கூறும் இடைச்செருகலாக வந்துள்ள அடிகள் எத்தனை உள்ளன? நான் : நான் கணக்கிட்டுக் கொண்டு வரவில்லை. இப்படி ஒரு சூழ்நிலை உருவாகும் என்று நினைக்கவில்லை. இப்பொழுது சரியான எண்ணிக்கை வேண்டும் என்று தாங்கள் விரும்பினால், மதிப்பிற்குரிய எங்கள் துணை வேந்தர் நூலகருக்குத் தொலைபேசி மூலம் தெரிவித்தால், 'பாரதியாரின் கவிதைகள்’ என்ற நூலை வரவழைக்க லாம்; கணக்கிட்டுச் சொல்லலாம். உத்தேசமாகச் சொன் னால் போதும் என்று கருதினால் சுமார் அறுபது அடிகள் இருக்கலாம் என்பேன். தெ. பொ. மீ. அறுபது அடிகள் இருக்க முடியாது. நான் : நாற்பது அடிகள் என்று தான் வைத்துக் கொள்ளுங்களேன். ஆனால் இடைச் செருகல் என்பதை ஒப்புக் கொண்டேயாக வேண்டும். தெ. பொ. மீ : அந்த அளவும் இருக்க முடியாது. நான் : முப்பது அடிகள் என்று வைத்துக் கொள்ள ·żo) pri p Tr? தெ. பொ. மீ ; இந்த அளவும் இருக்க முடியாது. நான் : இருபது அடிகள் வரை இறங்குவேன். அதற்குக் கீழ் இறங்க ஒருப்படேன். ஆனால் தேவையற்ற இடைச் செருகல் என்பதை ஒப்புக் கொண்டேயாக வேண்டும். தெ. பொ. மீ ; என்ன டாக்டர் ரெட்டியார்? அறுபது இருக்கும் என்று சொல்லி இருபதிற்கு இறங்கி விட்டீர் களே என்று கிண்டல் பாவனையில் கூறினார்.