பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482 - மலரும் நினைவுகள் வைத்தேன். இந்த இரண்டு சிறு விருந்துகளுக்கும் திரு அனந்தசயனம் அய்யங்கார் அவர்கள் முன்னதாகவே, எழுந்தருளி மணமக்களை வாழ்த்தினார்கள். சிற்றுண்டி அருந்திய பின் இரண்டுமணி நேரம் தங்கி வந்திருந்த விருந்தினர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தார்கள் . எவ்வளவு அன்பும் பாசமும் வைத்திருந்தால் மூன்று கிலோ மீட்டர் தொலைவிலுள்ள என் குடி லுக்கு எழுந் தருளியிருக்க வேண்டும்? அப்பொழுதெல்லாம் என் மனம், என்ன மாதவம் செய்ததோ? இச்சிறு குடில்?’ என்று எண்ணி மகிழும். கண்ணன் விதுரனின் திருமாளிகைக்கு எழுந்தருளினபோது விதுரன் பெற்ற மகிழ்ச்சியைப் போல் நானும் பெற்றேன். 1977-செப்டம்பர் திங்கள் 24 ஆம் நாள் என் செலவில் தமிழ் துறைப் பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் , முதுகலை மாண்வர்கள், என் மணிவிழாவைக் கொண் டாடினார்கள். இந்த நிகழ்ச்சிக்குத் திரு. அனந்தசயனம் அய்யங்கார் அவிர்கள்தான் தலைமை தாங்கினார்கள். மலரொன்றும் வெளியிடப் பெற்றது. நkன் ஒய்வு பெறும் நிலையிலும் இப்பெருமகனாரின் வாழ்த்து பெறும் பேறு பெற்றேன்.