பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. அடிசிற்கு இனியவள்

அன்று அவனுக்குஎன்ன வந்தது என்று புரியவில்லை. கொத்தவால் சாவடிபோல்

எப்போதும், ஆரவாரமாக இருந்து பழக்கப்பட்டவன் அவன். அன்று ஏனோ எலியட்.கடற்கரை போல் அமைதியாகக் காணப்பட்டான். வரும் போதே கன்றுக் குட்டிபோல் அவளை வந்து முட்டும் பழக்க முள்ளவன அவன். அன்று ஏனோ முகத்தில் சலனமின்றிக் காணப்பட்டான். அவன்

அளவுக்குமீறி அமைதியாக இருக்கும் வேளைகளில் அவள் அஞ்சி நடுங்குவாள்.

سےleirهagے

அதற்கும் இதற்கும் வேகமாக நடந்தால் கூட

அவள் உள்ளம் அதிரும்.