பக்கம்:மலர் மணம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 மலர்

படித்திருந்தாலும், எவ்வளவு அறிவுரைகள் கேட்டிருந் தாலும் மனக்குரங்கை அடக்கிக் கட்டுப்படுத்த முடிய வில்லையே. ஓர் இளைஞனது மனம், புலன்களின் வழி செல்வதில் வியப்பென்ன! நான் தோள்பட்டையில் ஏதோ சொரிந்து கொள்பவனைப் போல அடிக்கடித் திரும்பித் திரும்பி அல்லியைப் பார்த்துக் கொண்டே யிருந்தேன். நான் பார்த்த போதெல்லாம் அல்லியும் என்னைப் பார்த்துக்கொண்டிருந்ததை அறிந்தேன். என் பார்வைபட்டதும், பூக்காத புன்னகையுடன் அல்லியின் முகம் நாணத்தால் சிவந்து கவிழும். நான் பார்ப்பதால் அவள் பார்ப்பது கெட்டுப்போகிறதே என்று கருதி, தொடர்ந்து சிறிது நேரம் பார்க்காமலிருக்க முயற்சி செய்தேன். முடியவில்லையே!

ஊர்வலம் வழியிலுள்ள சோலைகளின் ஊடே ஊர்ந்து சென்று, இடையிடையேயுள்ள சிறு சிறு வாய்க்கால் களைக் கடந்தும் அருவிகளைத் தாண்டியும் மலையடி வாரத்திலுள்ள ஐயனர் கோயில் திடலை அடைந்தது.

விழாவின் சார்பாக அங்கே நடக்க இருப்பவைகள் என்னென்ன ? சர்க்கரைப் பொங்கல் செய்வார்கள். மேலும் விருந்துக்கு வேண்டிய உணவு வகைகளெல்லாம் தயாரிப்பார்கள். எல்லாம் தயாரானதும், விருந்து நடக்கும். பின்னர் நாட்டாண்மைக்காரர் தேர்வு-அதன் பிறகு சில கேளிக்கைகள். இவையாவும் முடிந்ததும், காலையில் வந்தது போலவே மாலையிலும் ஊர்வலமாகப் புறப்பட்டு ஊர் போய்ச் சேர்வார்கள். இது தான் நிகழ்ச்சி நிரல்.

அநுபவ மிக்க ஆண்களும் பெண்களும் அடுப்பு வே லை யி ல் முனைந்து விட்டார்கள். மற்றவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/62&oldid=656305" இலிருந்து மீள்விக்கப்பட்டது