பக்கம்:மலர் மணம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 71

பொறுப்பாளி? ஒருவேளை சலவை கொண்டுவந்தவன்,

தவறுதலாக மாற்றி நம் வீட்டில் கொடுத்துவிட்டிருக் கலாம். ‘

‘’ ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்யாம். எவ்வளவு சுற்றி வளைத்துப் பேசுகிருள் தெரியுமா இந்தத் திருடி !”

ஏம்மா என்ன விணுக இழுத்துப்போட்டு வதைக் கிறாய்? அத்தான் பட்டணத்தில் அல்லவா படித்துக் கொண்டிருக்கிறது !”

“ தெரியுமடி நாங்கள் ஏறின வண்டியிலிருந்து தான் அவன் இறங்கினன். இது உன் அப்பாவுக்குத் தெரியாது. நான் மட்டும் பார்த்தேன். அவரிடம் சொன்னுல் ஏதாவது எரிந்துவிழுவார் என்றெண்ணிப் பேசாமல் இருந்துவிட்டேன். ஆல்ை, நான் தன்சீனப் பார்த்தது அழகனுக்குத் தெரியாது. இருப்பினும் அவன் எங்களைப் பார்த்திருக்கக் கூடும். நாங்கள் வீட்டில் இல்லாததை அறிந்து கொண்டதால், அவன் அங் கிருந்து நேரே இங்கு வந்திருக்கிறன். உண்மைதானே? இப்பொழுதாவது ஒத்துக்கொள். நான் உன் அப்பா விடம் சொல்லாமல் உன்னைக் காப்பாற்றுகிறேன். இனி மேலும் மறைத்தாயோ, அப்பாவிடம் அம்பலப்படுத்தி விடுவேன். அப்புறம் நீ யாயிற்று, அவர் ஆயிற்று. என்ன சொல்லுகிறாய் ?”

என்று அம்மா கடுமையாய்க் கடிந்து கொண்ட்ார்கள். நான் தேம்பித் தேம்பி யழுதேன்; அம்மாவைக் கட்டிக் கொண்டேன். அவர்களும் அணைத்துக் கொண்டார்கள்; அழுது பயனில்லை. கடந்ததைச் சொல் என்றார்கள்.

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/73&oldid=656317" இலிருந்து மீள்விக்கப்பட்டது