பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவண் வண்டுர் தேவாதிதேவன் 123 ந-ம; என்று இரண்டாகப் பிரிக்கலாம். 'ம' என்பது வட மொழியில் எனக்கு உரியவன், என்றும், 'ந' என்பது அல்லன் என்றும் பொருள்படுகின்றன. அஃதாவது. எனக்கு நான் உரியவன் அல்லன் என்ற பொருள் கிடைக்கின்றது. இதனால் நான் பிறனுக்கு (ஈசுவரனுக்கு) உரியவன்' என்பது பெறப்படுகின்றது. இம் முறையில் இச்சொல் ஈசுவர பாரதந்திரியத்தைத் தெரிவிக்கின்றது. இன்னும் விளக்கிக் கூறினால், இச்சொல் ஞானத்தினால் ஏற்படும் சுதந்திரத் தன்மையை ஒழிக்கின்றது. அதன் காரணமாய் ஏற்படும் 'தன்னைத் தானே காத்துக் கொள்ள முடியும், என்னும் எண்ணத்தையும் நீக்குகின்றது. இனி, இவனைக் காத்து இரட்சிப்பவன் ஈசுவரனே ஆகின்றான்' என்ற துணிவு பிறக் கின்றது; அஃதாவது ஈசுவரனே உபாயம் என்ற பொருள் கிடைக்கின்றது. இந்த மன நிலைதான் தாய்' என்று குறிக்கப்பெறுகின்றது. மூன்றாவது அவஸ்தைமேலும் நம் எண்ணம் அலைபாய் கின்றது. பெற்றோர் அல்லது உறவினர் கூட்டாமை யிலேயே தன்லவனுடன் இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து தலைவனுடைய ஒப்புயர்வற்ற வனப்பு முதலியவற்றில் ஈடு பட்டு இருப்பவள் மகள், குடியின் கட்டுப்பாட்டையும் பாராமல் அவனைக் கிட்டியல்லது நான் உயிர் வாழ்ந்திருக்க மாட்டேன்’ என்றும் பதற்றத்தையுடையவள் இவள்: காலக் கழிவினை இவளால் பொறுக்க முடிவதில்லை. திருமந்திரத் தில் பிரணவத்தாலும் நமஸ்ஸாலும் எல்லோருக்கும் சேஷியாய் (தலைவனாய்) அறுதியிடப் பெற்றவன் எம்பெரு மான்; எல்லோருக்கும் புகலிடமானவன் அவனே. பிரணவத் தாலும் நமஸ்ஸாலும் இவை உணரப்பட்ட பின்பு 'நாராயண' என்ற சொல்லினால் கூறப்பெற்றுள்ள எம்பெரு மானுடைய சொரூபம், உருவம், குணம், விபூதி முதலிய வற்றின் சேர்க்கையாலுள்ள பெருமையை நினைந்து மகிழ்ந்