பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

謝與》 மலைநாட்டுத் திருப்பதிகள் விழும்படியான தீவினையேன் ஆயினேனே' என்கின்றாள். எதிர்மறை இலக்கணையால் "நல்வினையேன்” என்பது குறிப்பு. பரமன் அடியார்களின் திருவடிகளில் வீழ்தல் நல்வினைப் பயனன்றோ?நான் விடுதூதாய் நீங்கள் திருமூழிக் களத்திற்கேகி அத்திருமேனியடிகளை நோக்கி, திருப்புளி யடியிலே கி. க்கின்ற ஒருத்தி உம்முடைய திருமேனியில் ஆசை வைத்து நைகின்றாள்; அவளுக்கு உமது திருமேனியைக் கொடுத்தருளுவீர்” என்று சொல்லுவீர்களாக" என்று குறையிரக்கின்றாள். இச்சொல்லுதவி புரியின், அவர்கள் புதிய பொலிவினைப் பெற்றுத் தெளி விசும்புப்பேறும் பெறுவர் என்கின்றாள். மேலும், மேகத்தை நோக்கி இவ்வாறு பேசிகின்றாள்; "தெளிவிசும்பு கடிதுஓடித் தீவிளைத்து மின் இலகும் ஒளிமுகில் காள்! திருமூழிக் களத்துஉறையும் ஒண்சுடர்க்குத் தெளிவிசும்பு திருநாடாத் தீவினையேன் மனத்து உறையும் துளிவார்கள் குழலார்க்குஎன் துtதுஉரைத்தல் செப்புமினே' (தீ-மின்னல், தெளிவிசும்பு-பரமபதம்; துளிவார்கள் குழல்-துளித்து ஒழுகும் தேனினையுடைய மயிர்முடி.) இங்கு மேகங்களை ஆசாரியர்களாகக் கொள்ளல் வேண்டும். விண்ணில் விரைவாகச் சஞ்சரித்தலும் கொள்ளி வட்டம்போல் மின்னல் விளங்கப்பெறுதலும் முகில்களின் இயல்பு. ஆசாரியர்கட்கும் லீலா விபூதி நித்திய விபூதி என்ற இடங்களில் சஞ்சரிக்க வல்லமையுண்டாதலால் தெளிவிசும்பு கடிதோடுகை அவர்கட்கும் பொருந்தும். நன்றாக மழை 25. திருவாய் 9, 15