பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமூழிக்களத்து விளக்கு 197 எம்பெருமான் சந்நிதியிலேயே ஓதி நோயறுக்குமே" என்று கூறியவாறு சம்சாரமாகிய நோயினைத் தீர்க்கும் உணர் வினைப் பெறுகின்றோம். பெறவே. “காண்கின்ற ஐம்பூதங் கட்கும் இரு சுடர்க்கும் சேண்கலந்த இந்திரற்கும், தேவர்க்கும், மாண்கரிய பாழிக் களத்தூர்க்கும் பங்கயத்து நான்முகற்கும் மூழிக் களத்தான் முதல்' (பாழிக்களம் - சுடுகாடு.) என்ற பிள்ளைப் பெருமாள் அய்யங்காரின் பாசுரமும் நம் நினைவிற்கு வருகின்றது. அந்த நினைவுடன், மூழிக்களத் தானே முதற் கடவுள் என்ற எண்ணத்துடன், மனநிறைவு பெற்று நம் இருப்பிடத்திற்குத் திரும்புகின்றோம். 34. நூற். திருப். அந்தாதி-62