பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவித்துவக்கோட்டு அம்மான் 205 (ஊதை - குளிர்காற்று; உறவுநீர் - வன்மையையுடைய, உடன்று மாறுபட்டு, அலைக்கும் வருந்தியபொழுது: தலை அளித்தல் - அன்பு செய்தல்; வரைப்பினள் - புரக்கப் படும் எல்லைக்கு உட்பட்டவள்; விழுமம்-துன்பம்; களைஞர் - நீக்குவார்; இலள் - பெற்றிலள்.) 'அன்னை அலைப்பினும், அணைப்பார் பிறரின்றி அவள் மாட்டே செல்லும் குழவி போல, நீ அருளின்றிப் பிரியினும் நின்மாட்டே நின்று நின் தண்ணளியால் வாழும் நிலை யினள்’ என்று தோழி கூறும் கருத்தினையே ஆழ்வாரும் தன்னைக் குழந்தை நிலையிலும் இறைவனைத் தாய் நிலை யிலும் வைத்துப் பேசுகின்றார். குழந்தையைக் காட்டிய குறுந்தொகைப் பாடலைப் படித்துவிட்டு, ஆழ்வார் பாக ரத்தைப் படித்தால் பொருள் மேலும் தெளிவுறுகின்றது. 'தாய் உடன்று அலைக்குங் காலையும் வாய்விட்டு அன்னாய்!” என்று அலைக்கும் குழவி போல’ என்ற சங்கப் பாடலின் உவமை ஆழ்வாரின் இறைமைப் பாடலில் புது முறையில் அமைந்து புத்தொளி வீசி நின்று நயமுறுகின்றது. பாட்டின்பம் பக்தி உணர்வாக மாறி நம்மை மேலும் நெகிழ் விக்கின்றது. கணவன் ஒருவன் தான் தீ முன் வலம்வந்து கைபிடித்துத் துணைவியாகக் கொண்ட குலமகளைக் கண்டவர்கள் இகழும் வண்ணம் மிகக் கேவலமாக நடத்துகின்றான். எனினும், அக்குல மகள் கணவனையன்றி வேறு ஒருவரையும் புகலிட மாக நினைப்பதில்லை. இந்த உணர்ச்சியுடன், 'கண்டார் இகழ்வனவே காதலன்தான் செய்திடினும் கொண்டானை அல்லால் அறியாக் குலமகள்போல்