பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 மலைநாட்டுத் திருப்பதிகள் வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களிடம் இவ்விரோதிகள் யாவும் அனுகா என்பது கருத்து. இத்தகைய எம்பெருமான் பெரிய பிராட்டியாரோடும், பூமிப் பிராட்டியாரோடும் நப்பின்னைப் பிராட்டியாரோடும் திருநாவாயில் எழுந்தருளியுள்ளான். இதனை ஆழ்வார், "கொடியேரிடைக் கோகனகத் . தவள்கேள்வன் வடிவேல் தடங்கண் மடப்பின்னை மணாளன் சூழ் நெடியான்உறை சோலைகள் திருநாவாய்' (கொடியேர் - கொடியைப் போன்ற; கோகனகம். தாமரை, கேள்வன் - தலைவன்; அணுகப்பெறும் - கிட்டப்பெறும்.) என்றும், “மணாளன் மலர்மங்கைக்கும் மண்மடந்தைக்கும்; கண்ணாளன் உலகத்துயிர் தேவர்கட்கெல்லாம்; விண்ணாளன் விரும்பி உறையும் திருநாவாய்' και ξ ξ Tமணாளன் - கணவன்; மலர்மங்கை - பெரிய பிராட்டி: மண்மடந்தை-பூமிப் பிராட்டி, கண் ஆளன்-தலைவன்; விண் ஆளன்.பரமபதநாதன்.) என்றும் கூறுகின்றார். மண்ணுலகத்தையும், விண்ணுலகத் தையும், பரமபதத்தையும், ஆட்சிபுரியும் எம்பெருமான் திருநாவாயில் விரும்பியுறைகின்றான். பெரிய பிராட்டியோ பரிந்துரைப்பதில் (புருஷ காரத்தில்) ஊன்றியிருப்பவள்; 19. திருவாய் 9,8 : 2 20. ങു. 9,8 5