பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெம்மாங்கு வெள்ளிப் பிடியரிவாள் விடலைப்பிள்ளை கையரிவாள் சொல்லி அடிச்சரிவாள் - சுழற்றுதடா கெல்கதிரை. சாரட்டு வண்டிக்காரா சலங்கைபோட்ட மாட்டுக்காரா மாட்டை விரட்டாதேடா கான்தாரேன் கேட்டுக்காசு. வெள்ளாடு மேய்க்கமாட்டேன் வேனிலிலே கிற்கமாட்டேன் கம்பங்காடு காக்கச்சொன்னல் காட்டைவிட்டுப் போகமாட்டேன். நத்தத்து ரோட்டுவழி ኣ நான் போறேன் ஒத்தைவழி மின்னிட்டாம் பூச்சிபோலே முன்னேவாடி பொன்மயிலே. ஆட்டுக்காரா மாட்டுக்காரா அடைமழைக்கு எங்கிருந்தாய் : குறும்பன்கம் பிளிக்குள்ளே குறுகிக்கிட்டு நான் இருந்தேன். ஆல மரம்.உறங்க . அடிமரத்துக் கிளிஉறங்க உன்மடிமேல் நான் உறங்க உலகம் பொறுக்கலையே. பொட்டலிலே - கிணறுவெட்டிப் பொறுக்குக்காள ரெண்டும்பூட்டி காப்புப்போட்ட கறுத்தமச்சான் கமலையூட்டத் தெரிலேயே. ' 21 126 127 128 129 180 13;