பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 - ஆராய்ச்சி உரை களிலும் வாய்மொழியிலும் கண்ட பல அமைதிகளே நுனித் துணர்ந்து அவற்றைப் பற்றிய வரையறைகளையும் தொல்காப்பியர் தம் நூலில் இணைத்துக்கொண்டார். குத்திரங்களில் என்ப' என் றும், என்மனர் புலவர் என்றும் அடிக்கடி வருவதனால் தொல்காப் பியர் பலகாலமாக வழங்கி வந்த இலக்கண மரபுகளே ஏற்று ஒழுங்கு படுத்தியிருக்கிருர் என்பது தெரிய வரும். அடிவரையறை இல்லாத செய்யுட்கள் இலக்கியத்தைப் பற்றியும் செய்யுட்களைப் பற்றியும் சொல்லி வரும் செய்யுளியலில் ஓரிடத்தில் அடி வரையறையில்லாத செய்யுட் கள் இன்னவை என்று கூறி, அவற்றிற்கு இலக்கணம் அமைக் கிருர், எழுநிலத்து எழுந்த செய்யுள் தெரியின் அடிவரை இல்லன ஆறென மொழிப' என்பது ஒரு சூத்திரம். அகமும் புறமுமாகிய எழுகிலத்தும் தோன்றிய செய்யுளே ஆராயின் அடிவரையின்றி வரும் இலக்கணத் தன. ஆரும் என்றவாறு' என்பது பேராசிரியர் உரை. முன்னுல் அடிவரையறையுள்ள செய்யுட்களுக்குரிய இலக்கணத்தைக் கூறி யிருக்கிருர் தொல்காப்பியர். இப்போது அடிவரையறை இல்லா தன. இன்னவை என்று சொல்ல வருகிறவர், முதலில் அவை ஆறு என்று தொகுத்துக் கூறினர். கூறும்போது, "ஆறென மொழிப' என்ருர். இந்த ஆறு என்ற பகுப்பு நெடுங் காலமாகப் புலவர் உலகத்தில் வழங்கி வருவன' என்ற கருத்தை மொழிப' என்பது காட்டும்; மொழிப.புலவர்கள் சொல்வார்கள். இவ்வாறு தோற்று வாய் செய்துவிட்டு அந்த ஆறு வகைகளையும் ஒரு குத்திரத்தில் சொல்கிரு.ர். ' அவைதாம் நூலி னை, உரையி னை, நொடியொடு புணர்ந்த பிசியி னன, ஏது துதலிய முதுமொழி யான, மறைமொழி கிளந்த மந்திரத் தான, கூற்றிடை வைத்த குறிப்பி ஞன." இந்தச் சூத்திரத்தில் நூல், உரை, பிசி, முதுமொழி, மந்திரம், குறிப்பு மொழி என்னும் ஆறு சொல்லப்படுகின்றன. நூல் என் பது இலக்கணம் அது புலவர் இயற்றுவது. உரை என்பது உரை செய்யுளியல், 164. 2. செய்யுளியல், 165.