பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 மலே அருவி மண்டபத்துச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ மல்லிகைப்பூ வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ இன்னம் என்ன வேனும் பெண்ணே - உனக் கேது வேனும் கண்ணே. 44 குத்தாலத்துச் சந்தையிலே ஏலங்கிடி லேலோ கொண்டைத்திருகு வாங்கித்தாரேன் • , ஏலங்கிடி லேலோ இன்னம் என்ன வேனும் பெண்ணே - உனக் கேது வேனும் கண்ணே. 45 செட்டிகுளம் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ செந்தாமரை வாங்கித்தாரேன் ஏலங்கிடி லேலோ இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக் கேது வேனும் கண்ணே. 46 பூலத் துருச் சங்தையிலே - ஏலங்கிடி லேலோ பூலாங்கிழங்கு வாங்கித்தாரேன்-ஏலங்கிடி லேலோ இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக் கேது வேனும் கண்ணே. 47 செவ்வாய்ப்பேட்டைச் சங்தையிலே-ஏலங்கிடி லேலோ செவந்திப்பூவு வாங்கித்தாரேன்-ஏலங்கிடி லேலோ இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக் கேது வேனும் கண்ணே. - 48 மஞ்சக்குப்பம் சந்தையிலே-ஏலங்கிடி லேலோ மஞ்சள் பூவு வாங்கித்தாரேன்-ஏலங்கிடி லேலோ இன்னம் என்ன வேணும் பெண்ணே-உனக் கேது வேணும் கண்ணே. 49 வேலூருச் சந்தையிலே-ஏலங்கிடி லேலோ வெட்டிவேரு வாங்கித்தாரேன்-லேங்கிடி லேலோ இன்னம் என்ன வேணும் பெண்ணே-உனக் கேது வேணும் கண்ணே. - 50 ஆரப்பாளையம் சந்தையிலே-எலக்கிடி லேலோ அரளிப்பூவு வாங்கித்தாரேன்-எலங்கிடி லேலோ இன்னம் என்ன வேணும்பெண்ணே-உனக் கேது வேனும் கண்ணே. * 51