பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்பெண் தர்க்கம் 115 வாணியம்பாடிச் சந்தையிலே-ஏலங்கிடி லேலோ வாழைப்பூ வாங்கித்தாரேன்-ஏலங்கிடி லேலோ இன்னம் என்ன வேனும் பெண்ணே-உனக் கேது வேணும் கண்ணே. 52 வடமதுரைச் சங்தையிலே-ஏலங்கிடி லேலோ வாடாமல்லிகை வாங்கித்தாரேன்-ஏலங்கிடி லேலோ இன்னம் என்ன வேணும் பெண்ணே-உனக் கேது வேணும் கண்ணே. - 53 மூக்குப்பேரிச் சந்தையிலே-ஏலங்கிடி வேலோ மூக்குத்தியும் வாங்கித்தாரேன்-ஏலங்கிடி லேலோ இன்னம் என்ன வேணும் பெண்ணே-உனக் கேது வேனும் கண்ணே. 54 மூக்குப்பேரிச் சந்தையிலே-ஏலங்கிடி வேலோ முருங்கப்பூ வாங்கித்தாரேன்-ஏலங்கிடி லேலோ இன்னம் என்ன வேணும் யெண்ணே-உனக் கேது வேணும் கண்ணே. 55 காரைக்காலுச் சங்தையிலே-ஏலங்கிடி லேலோ கம்மல்ரெண்டும் வாங்கித்தாரேன்-ஏலங்கிடி லேலோ இன்னம் என்ன வேணும் பெண்ணே-உனக் கேது வேணும் கண்ணே. §6 பெருமாள்கோயில் சந்தையிலே-ஏலங்கிடி லேலோ பீலிரெண்டு வாங்கித்தாரேன்-ஏலங்கிடி லேலோ இன்னம் என்ன வேணும் பெண்ணே-உனக் கேது வேணும் கண்ணே. 57 பில்லானூருச் சங்தையிலே-ஏலங்கிடி லேலோ பில்லாக்கொண்ணு வாங்கித்தாரேன் ஏலங்கிடி லேலோ இன்னம் என்ன வேணும் பெண்ணே-உனக் கேது வேனும் கண்ணே. 58 காரைக்குடிச் சந்தையிலே-ஏலங்கிடி லேலோ காலுத்திண்டை வாங்கித்தாரேன்-ஏலங்கிடி லேலோ இன்னம் என்ன வேணும்-உனக் * - கேது வேணும் கண்ணே. 59