பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 2 7 தாலாட்ே கம்பங்கதிர் அறுக்கையிலே கண்ணேநல்ல கனத்தமழை பெய்ததடி, நெல்லுக்கதிர் அறுக்கையிலே - கண்ணே அங்கே நல்லமழை பெய்ததடி. சோளக்கதிர் அறுக்கையிலே - கண்ணே அங்கே சோனேமாரி பெய்ததடி. 10 கதிரெல்லாம் கட்டுக்கட்டாக் - கண்ணேநான் கட்டிவச்சேன் கைவலிக்க, நாலாயிரம் சனத்தோடே - கண்ணே அங்கே நானும்போனேன் நாற்றுநட. ஆளுக்கு நாலாயிரம் - கண்ணோான் அடுக்கிவச்சேன் அலங்கியைப்போல். குவித்துவச்ச நாற்றெல்லாம் - கண்ணே ஆள் கும்பலிலே பறந்திருச்சு. பாத்திகட்டி காற்றுநட்டேன் - கண்ணேநான் பரமசிவன் தயவாலே. 15 பூமாதேவி தயவாலே - கண்ணேகம் பூமியெல்லாம் விளஞ்சிருச்சு. சோழவந்தான் காளேசோடி - கண்ணே இன்னம் பாளையங்கோட்டைக் கா8ளசோடி நெல்லூரு நெட்டைச்சோடி - கண்ணேஇன்னம் கடலூரு கட்டைச்சோடி சமுத்துரு காளே கூடக் - கண்ணே அங்கே சூட்டிக்கையாச் சூடடிக்கும். வட்டமாத்தான் வருகுதம்மா - கண்ணேஅந்த வடிவழகுக் காளையெல்லாம். 20 வருகுதம்மா ஒண்ணுெண்ணுய்க் - கண்ணே அந்த வளத்தியான கா8ளயெல்லாம். குடுகுடுன்னு வருகுதம்மா - கண்ணே அந்தக் குட்டையான காளையெல்லாம். . . . .