பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலாட்டு 249 பரட்டைப் புளியமரம் - கண்மணியே - பந்தாடும் நந்தவனம். காக்காயும் கத்தக்கத்தக் - கண்ணேரெண்டு கன்னிமாரு வாருங்க. செம்போத்துக் கத்தக்கத்தக் - கண்ணேரெண்டு சேவகரு வாருங்க. 5 ஆற்றுமண லேப்பரப்பிக் - கண்ணேசோறு ஆக்கிவிள யாடையிலே ஆக்கிநீ வச்சசோற்றைக் - கண்மணியே அழித்திட்டானே உன்மாமன் ? மாமன் பொதிஅளக்கக் - கண்மணியே மச்சினன்மார் கோட்டைகட்டக் கரும்புருக வேம்புருகக் - கண்மணியே கண்டவர்கள் மனமுருக இரும்புருகப் பெற்றெடுத்த - கண்மணியே இருதயத்தை ஆரடித்தார் ? 10 அத்தை மக்கள் வாசலுக்குக் - கண்மணியே கித்தகித்தம் போகாதே. பாம்படித்துப் போடுவார்கள் - கண்மணியே பழிகார அத்தைமக்கள். சோறு அடுப்பிலேதான் - கண்மணியே சோலைக்கிளி கையிலேதான். பாலும் அடுப்பிலேதான் கண்மணியே பாலைக்கிளி கையிலேதான். ஆரு அடித்தார்கள் - கண்ணே உன்னை அரளிப்பூச் செண்டாலே ? 15 மச்சினிச்சி அடித்தாளோ - கண்ணே உன்னே மல்லிகைப்பூச் செண்டாலே ? ஒருச்சாய்த்துப் படுத்துகீ - கண்மணியே - உறங்கிடம்மா தொட்டியிலே.