பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 மலே அருவி மருந்தரைக்கத் தாதிவேறே - கண்மணியே மருந்துபோடத் தாதிவேறே. 30 தலைகால்என் னமும்வலித்தால் - கண்மணியே தைலங்தேய்க்கத் தாதிவேறே. ஊஞ்சல்கட்டத் தாதிவேறே - கண்மணியே ஊஞ்சலாட்டத் தாதிவேறே. எண்ணெயிலே ஒத்தடமும் - கண்மணியே வெந்நீரிலே ஒத்தடமும் இன்னம்வேறே ஒத்தடமும் - கண்மணியே எனக்குக்கொடுக்கத் தாதிவேறே. செல்வத்தி லேபிறந்தேன் - கண்மணியே செல்வத்தி லேவளர்ந்தேன். 35 ஆடுஎன்ன மாடுஎன்ன - கண்மணியே காடுஎன்ன வீடுஎன்ன முத்துஎன்ன ரத்னம் என்ன - கண்மணியே சொத்துஎன்ன கெத்துஎன்ன வகைவகையாய் நகைகள்என்ன - கண்மணியே ஜதைஜதையாய் நகைகள்என்ன, சாாட்டு வண்டிஎன்ன - கண்மணியே சலங்கைபோட்ட வண்டிஎன்ன ! அஞ்சு வயசிலேநான் . கண்மணியே அரிசித்தரி படிச்சேனம்மா. 40 பத்துவயசுக் குள்ளே நான் - கண்மணியே படிப்பெல்லாம் முடிச்சேனம்மா. பன்னிரண்டு வயசிலோன் - கண்மணியே பருவமான காலத்திலே வாலிபப் பிராயத்திலே - கண்மணியே வாழ்க்கைப்பட்டேன் உங்கப்பாவுக்கு. வருசம்பத் திருவதுமாச்சு - கண்மணியே வாசனக்கும் பிள்ளையில் இல.